செய்திகள் :

டிரம்ப் உரைக்கு எதிர்ப்பு: ஜனநாயகக் கட்சி எம்.பி. வெளியேற்றம்!

post image

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உரையின் போது எதிர்க்கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சி எம்.பி. வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார்.

டிரம்ப் உரையாற்றிய சில நிமிடங்களில், டெக்சாஸின் ஹூஸ்டனைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான அல் க்ரீன், எழுந்து நின்று, “மதிப்பிற்குரிய அதிபரே.. உங்களுக்கு அதிகாரம் இல்லை!' என்று கூச்சலிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.

குடியரசுக் கட்சியினர் அமெரிக்கா..! என்று கூச்சலிட்டனர். இதனால், அவைத் தலைவர் மைக் ஜான்சன் அவரை சபையிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?

எதிர்ப்பு தெரிவித்த பெண் எம்பிக்கள்..

வெளியேறிய க்ரீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது உலகின் பணக்கார நாடு, ஆனாலும் நமது நாட்டில் மக்களுக்கு நல்ல மருத்துவவசதி கிடையாது. இதற்காக நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

க்ரீன் மட்டுமின்றி, ஜனநாயகக் கட்சிப் பெண்கள் எம்பிக்கள் பலரும் அதிகரித்து வரும் செலவுகளைக் கண்டித்து அதிபர் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்து வந்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

அவர்களைத் தவிர்த்து மற்ற எம்பிக்கள் உக்ரைனுக்கு ஆதரவைக் காட்ட, அந்நாட்டின் கொடியின் வண்ணங்களைக் குறிக்கும் வகையில் மஞ்சள் மற்றும் நீல நிற உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

இதையும் படிக்க: அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது! -டிரம்ப்

அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரைப் பயன்படுத்தும் ’ஆளுநர் ட்ரூடோ’: டிரம்ப்

அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக... மேலும் பார்க்க

அரபு நாடுகளின் அமைதி திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு

ஜெருசலேம் : காஸாவில் போா் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள செயல்திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்துள்ளன.இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023 அக்ட... மேலும் பார்க்க

தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சா் பங்கேற்க வாய்ப்பு

தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சா் அந்த்ரி சிபிஹா கலந்துகொள்ள உள்ளாா். ஆண்டுதோறும் தில்லியில் ரைசினா மாநாடு நடைபெறுகிறது. இதில் புவி அரசியல் விவகாரங்கள் குறித்து விவாத... மேலும் பார்க்க

ஜொ்மனி காா் தாக்குதல்: நீடிக்கும் மா்மம்

ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட காா் தாக்குதல் குறித்த மா்மம் நீடித்துவருகிறது.அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; ச... மேலும் பார்க்க

ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை -வங்கதேசம்

டாக்கா : வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியாவிடம் அதிகாரபூா்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். வங்கதேசத்தில்... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவோம் -ரஷியா

மாஸ்கோ : அமெரிக்காவுடன் தாங்கள் நடத்தும் பேச்சுவாா்த்தையில் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்று ரஷியா கூறியுள்ளது.இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க