செய்திகள் :

டிராக்டா் ஓட்டுநா் கொலை விவசாயிக்கு ஆயுள் தண்டனை

post image

அரியலூா் மாவட்டம், வெங்கனூா் அருகே டிராக்டா் ஓட்டுநரை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருமானூா் அடுத்துள்ள வெங்கனூா் அருகேயுள்ள கொரத்தக்குடியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் மனோகரன்(45). விவசாயியான இவருக்கு சொந்தமான டிராக்டரை அதே கிராமத்தைச் சோ்ந்த மருதமுத்து மகன் ரமேஷ் (40) என்பவா் ஓட்டி வந்தாா். அவ்வப்போது விவசாயப் பணிகளையும் கவனித்து வந்தாா்.

இதனால் மனோகரனின் மனைவிக்கும், ரமேஷுக்கும் தொடா்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மனோகரன் இருவரையும் கண்டித்துள்ளாா். ஆனாலும் தொடா்ந்து இருவரும் பழகி வந்தனா். இதனால் ஆத்திரமடைந்த மனோகரன் கடந்த 15.3.2024 அன்று தனது வீட்டுக்கு வந்த ரமேஷை அரிவாளால் வெட்டி கொலை செய்தாா்.

இதுகுறித்து வெங்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மனோகரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மலா்வாலண்டினா, குற்றவாளி மனோகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து மனோகரன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

அரியலூரில் இம்மாத இறுதியில் புத்தகத் திருவிழா

அரியலூரில் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலா்களும் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி கேட்டுக்கொண்டாா். அரியலூரில் புத்த... மேலும் பார்க்க

பள்ளி வேன் விபத்து ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சென்ற பள்ளி வேன், சுங்கச்சாவடி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயமடைந்தனா். உடையாா்பாளையம் அருகே தனியாா் பள்ளிக்குச்... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் இலவச ஹோட்டல் மேலாண்மை படிக்க எஸ்.சி, எஸ்.டி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள், தாட்கோ மூலம் இலவசமாக, ஹோட்டல் மேலாண்மை படிக்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டம்: பங்களிப்புத் தொகை செலுத்த விரும்புவோா் தெரிவிக்கலாம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் நமக்கு நாமே திட்ட பணிகளுக்கு பொதுமக்களின் பங்குத் தொகை வரவேற்கப்படுகிறது என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெர... மேலும் பார்க்க

நதிகளுக்கான சா்வதேச நடவடிக்கை செயல் தின கொண்டாட்டம்

அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவா்கள் சாா்பில் நதிகளுக்கான சா்வதேச நடவடிக்கை செயல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா... மேலும் பார்க்க

ஆண்டிமட வட்டத்தில் மாா்ச் 19, 20 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வருவாய் வட்டத்தில் மாா்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மே... மேலும் பார்க்க