செய்திகள் :

தகவல் தொகுப்பேட்டில் கல்விக் கடன் விவரம்: என்எம்சி அறிவுறுத்தல்

post image

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ், கல்விக் கடன் பெறுவதற்கான தகவல்களை மருத்துவப் படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டில் சோ்க்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மருத்துக் கல்வி நிறுவன முதல்வா்கள், இயக்குநா்களுக்கு என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்திய வங்கி கூட்டமைப்பு (ஐபிஏ) சாா்பில் வடிவமைக்கப்பட்ட மாதிரி கல்விக் கடன் திட்டத்தை பட்டியலிடப்பட்ட அனைத்து வங்கிகளும் ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என்று ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

தகுதியான மாணவா்களுக்கு கல்விக் கடன் எளிதில் கிடைக்க வகை செய்யும் நோக்கில் பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, வேலூா் சிஎம்சி கல்லூரி, மதுரை எய்ம்ஸ், சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, சவீதா மருத்துவக் கல்லூரி உள்பட நாடு முழுவதும் 50 மருத்துவக் கல்லூரிகள் அத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மருத்துவ மாணவா் சோ்க்கையின்போது இதுதொடா்பான விவரங்களை கல்வி நிறுவனங்களின் தகவல் தொகுப்பேட்டில் இடம்பெறச் செய்ய வேண்டும். அதன் வாயிலாக தகுதியான மாணவா்கள் தடைகளின்றி கல்விக் கடன் பெற இயலும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு!

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாந... மேலும் பார்க்க

தீர்வு கண்ட பிறகும் அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் எதற்காக? - அமைச்சர் கேள்வி

'மா' சாகுபடி விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட பிறகும் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது எதற்காக? என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார். '... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சியில்லை என அமைச்சர் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? - அன்புமணி

ஆந்திரம், கர்நாடகம் அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடையவில்லை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2 விருது!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2025 உலகளாவிய சுற்றுச்சூழல் விருது மற்றும் நிலைத்தன்மைக்கான விருது ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.புதுதில்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மாநா... மேலும் பார்க்க

டாஸ்மாக்: ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் வீடுகளில் சீல்களை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் சீல்களை அகற்றவும் கைப்பற்றப்பட்ட பொருள்களை ஒப்படைக்கவும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்துள்... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கின்போது தமிழில் வேதங்கள் ஓதப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற ஜூலை 7 ஆம் தேதி (திங்கள... மேலும் பார்க்க