செய்திகள் :

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ. 72,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

போர்ப்பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் இருந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கும் விற்பனையானது.

அதைத்தொடா்ந்து திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.9,230-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.73,840-க்கும் விற்பனையானது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.73,240 விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமையான இன்று(ஜூன் 25) மூன்றாவது நாளாகவும் தங்கம் விலை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ. 72,560-க்கும் கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,070-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளி விலை கிராம் ரூ. 1 குறைந்து ரூ.119-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,19,000-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிக்க... ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! -

கூலித்தொழிலாளிக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின் வேலூர் சுற்றுப் பயணத்தின்போது, வேலை வேண்டி மனு அளித்த கூலித் தொழிலாளி பொற்செல்விக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தில் விடுதிக் காவலராக நியமனம் செய்து, அதற... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

எர்ணாகுளம் - பெங்களூர் ரயிலில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க முயன்றவர்கள் கைது!

கோவை: பெங்களூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு தமிழகம் வழியே இயக்கப்படும் ரயிலின் பெட்டியில், தமிழ்ப் பெயர்ப் பலகை வைக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.எர்ணாகுளம... மேலும் பார்க்க

தந்தை திட்டியதால் தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மகன்!

நெல்லை மேலப்பாளையத்தில் சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதால், அவர் தூங்கும்போது கல்லைப்போட்டுக் கொலை செய்த மகனை மேலப்பாளையம் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்நெல்லை மேலப்பாளையம் ம... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில்... மேலும் பார்க்க

ஆக. 15 முதல் விஜய் சுற்றுப்பயணம்: எங்கிருந்து?

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்களை சந்திப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் வரும் ஆக. 15 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.தவெக தலைவர் விஜய், தமிழகத்... மேலும் பார்க்க