செய்திகள் :

தங்கம் விலை உயர்வு! புதிய உச்சத்தில் வெள்ளி!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்துள்ளது. அதேபோல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே, அவரது புதிய அறிவிப்புகள் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.

அதன்படி கடந்த செப்.6-ஆம் தேதி ரூ.80,000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தொட்டுவிடும் என நிபுணர்கள், வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 85,120-க்கும், கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ரூ. 10,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 29) சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 85,600-க்கும் கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ. 10,700-க்கும் விற்பனையாகிறது.

புதிய உச்சத்தில் வெள்ளி

இந்த மாத தொடக்கத்தில் (செப். 1) வெள்ளி விலை கிராம் ரூ.136-க்கும், ஒரு கிலோ ரூ.1.36 லட்சத்துக்கும் விற்பனையானது. தொழில் துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் அதன் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.160-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.60 லட்சத்துக்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதையும் படிக்க: விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர்... இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து!

The price of gold jewellery in Chennai has increased by Rs. 480 per sovereign. Similarly, the price of silver has also increased.

இளைஞர் தீக்குளிக்க முயற்சி! காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு ... மேலும் பார்க்க

சென்னையிலிருந்து செங்கோட்டை, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்!

ஆயுத பூஜையையொட்டி சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் இடையே நாளை(செப். 30) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 06075 சென்னை எழும்பூரில் இருந்து நாளை(செப். 30) இரவு 10.15... மேலும் பார்க்க

கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்

கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்... மேலும் பார்க்க

கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பார்வையிடவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் வருகை தந்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசார பயணம் மேற்... மேலும் பார்க்க

வீட்டைவிட்டு புறப்பட்ட விஜய்! எங்கே சென்றார்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டு, பட்டினம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட ந... மேலும் பார்க்க

தொடர் மழை எதிரொலி! உச்சம் தொடும் ஏரிகளின் நீர்மட்டம்!

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகும்.திங்கள்கிழமை காலை நிலவரப... மேலும் பார்க்க