செய்திகள் :

இளைஞர் தீக்குளிக்க முயற்சி! காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் போஸ்கோ (59). இவருக்கு சொந்தமான 55 சென்ட் நிலத்தை இவரது உறவினர் அபகரித்துக் கொண்டது தொடர்பாக குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த ஜான் போஸ்கோ வந்தார்.

திடீரென அவர் குறைதீர்க்கும் கூட்டம் அலுவலகத்திற்கு முன்பாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்ய முயன்றார்.

உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு இது குறித்து விசாரணை செய்து மேற்கொண்டர்.

அதில், நில அபகரிப்பு தொடர்பாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனு அளித்தும் எந்த பலனும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

இதையும் படிக்க: கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்

An incident in which a youth attempted to set himself on fire at a Public Grievance Redressal Day meeting at the Kanchipuram District Collectorate premises has caused a stir.

கரூர் பலி: இரவில் உடற்கூராய்வு செய்யக் கூடாதா? உண்மை என்ன?

கரூரில் இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்தது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்புக் குழு விளக்கம் அளித்துள்ளது.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் ... மேலும் பார்க்க

கரூர் பலி: விஜய் இன்று முக்கிய ஆலோசனை! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் இன்று(செப். 29) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.கரூர் சம்பவம் நடைபெற்ற சனிக்கிழமை இரவு முதல், கடந்... மேலும் பார்க்க

கரூர் பலி: அவதூறு, வதந்தி பரப்ப வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்

கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.karur stampede Don't spread slander and ... மேலும் பார்க்க

உயிர்சேதம் ஏற்படும் என ஆனந்தை எச்சரித்தோம்! எப்ஐஆரில் அதிர்ச்சித் தகவல்கள்!

நாமக்கல் விஜய் பிரசாரக் கூட்டத்தில் தாமதம் ஏற்பட்டபோது உயிர்சேதம் ஏற்படும் என தவெக பொதுச் செயலர் ஆனந்தை எச்சரித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு கரூரில் நடைபெற்ற தவெ... மேலும் பார்க்க

சென்னையிலிருந்து செங்கோட்டை, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்!

ஆயுத பூஜையையொட்டி சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் இடையே நாளை(செப். 30) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 06075 சென்னை எழும்பூரில் இருந்து நாளை(செப். 30) இரவு 10.15... மேலும் பார்க்க

கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்

கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்... மேலும் பார்க்க