செய்திகள் :

உயிர்சேதம் ஏற்படும் என ஆனந்தை எச்சரித்தோம்! எப்ஐஆரில் அதிர்ச்சித் தகவல்கள்!

post image

நாமக்கல் விஜய் பிரசாரக் கூட்டத்தில் தாமதம் ஏற்பட்டபோது உயிர்சேதம் ஏற்படும் என தவெக பொதுச் செயலர் ஆனந்தை எச்சரித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் பிரசாரத்துக்கு சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இருந்தே காலை 8.45 மணிக்குதான் விஜய் புறப்பட்டார்.

இதனிடையே, நாமக்கல்லில் கூட்டத்தை அதிகரிக்க வேண்டுமென்றே விஜய் தாமதமாக வந்ததாக நாமக்கல் டவுன் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாமக்கல்லில் வேண்டுமென்றே விஜய்யின் வருகை தாமதப்படுத்தப்பட்டதால், கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டதை தவெக நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை.

பிரதான சாலை வழியாக தாமதமாக வந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி நிபந்தனைகளை மீறினர். பலமுறை அறிவுறுத்தியும், எச்சரித்தும் காவல்துறை சொன்னதை கேட்கவில்லை.

அசாதாரண சூழல் ஏற்பட்டு கூட்டநெரிசலில் உயிர்சேதம், கொடுங்காயம், மூச்சுத்திணறல் ஏற்படும் என தவெக பொதுச்செயலர் ஆனந்த், மாவட்ட செயலாளர் சதீஷை எச்சரித்தோம்.

நாமக்கல்லில் காத்திருந்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி, அரசியல் பலத்தை காட்டும் நோக்கத்துடன் விஜய்யின் வருகை வேண்டுமென்றே 4 மணிநேரம் தாமதமாக்கப்பட்டது.

பல மணிநேரம் காத்திருந்த மக்கள், போதிய தண்ணீர், உணவு, மருத்துவ வசதி செய்யப்படாததால், அதிக கூட்டத்தால் ஏற்பட்ட அழுத்தத்தாலும் வெய்யிலின் தாக்கம் காரணமாகவும் மக்கள் சோர்வடைந்தனர்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Namakkal Police registers case for violation of rules at TVK Meeting

இதையும் படிக்க : கரூர் பலி: செந்தில் பாலாஜிக்கு தொடர்பு! மக்கள் மீது தடியடி!! தவெக மனு

கரூர் பலி: இரவில் உடற்கூராய்வு செய்யக் கூடாதா? உண்மை என்ன?

கரூரில் இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்தது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்புக் குழு விளக்கம் அளித்துள்ளது.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் ... மேலும் பார்க்க

கரூர் பலி: விஜய் இன்று முக்கிய ஆலோசனை! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் இன்று(செப். 29) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.கரூர் சம்பவம் நடைபெற்ற சனிக்கிழமை இரவு முதல், கடந்... மேலும் பார்க்க

கரூர் பலி: அவதூறு, வதந்தி பரப்ப வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்

கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.karur stampede Don't spread slander and ... மேலும் பார்க்க

இளைஞர் தீக்குளிக்க முயற்சி! காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு ... மேலும் பார்க்க

சென்னையிலிருந்து செங்கோட்டை, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்!

ஆயுத பூஜையையொட்டி சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் இடையே நாளை(செப். 30) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 06075 சென்னை எழும்பூரில் இருந்து நாளை(செப். 30) இரவு 10.15... மேலும் பார்க்க

கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்

கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்... மேலும் பார்க்க