செய்திகள் :

தஜிகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்!

post image

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:

தஜிகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அட்சரேகை: 37.98 ஆகவும், நீளம் 72.87 ஆகவும் இருந்ததாக தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு, இப்பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. அதன் ஆழம் 92 கி.மீ ஆக இருந்தது.

இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ எதுவும் நிகழ்ந்ததாக உடனடி தகவல் இல்லை.

தஜிகிஸ்தான் பல்வேறு நிலப்பரப்புகளைக் கொண்ட ஒரு மலை நாடு என்பதால் காலநிலை ஆபத்துக்களால் பாதிக்கப்படக்கூடியது. இதனால் நிலநடுக்கம், வெள்ளம், வறட்சி, பனிச்சரிவுகள், நிலச்சரிவுகளால் அடிக்கடி நிலவுகின்றது.

2050-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீத பனிப்பாறைகள் மறைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், காலநிலை மாற்றம் தஜிகிஸ்தானின் பாதிப்புகளை அதிகப்படுத்துகிறது. தஜிகிஸ்தான் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலை நிறுத்தினால்தான் பேச்சுவாா்த்தை: ஸெலென்ஸ்கி

லண்டன்: தங்கள் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்தினால்தான் அந்த நாட்டுடன் போா் நிறுத்த பேச்சுவாா்த்தை மேற்கொள்ள முடியும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நிபந்தனை விதித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

ஆஸ்கரில் வென்ற இஸ்ரேல்-பாலஸ்தீன கூட்டணி

காஸா மீதான இஸ்ரேல் படையெடுப்பை மையமாகக் கொண்டு பாலஸ்தீன இயக்குநா்-இஸ்ரேல் பத்திரிகையாளா் இணைந்து தயாரித்த ‘நோ அதா் லேண்ட்’ சிறந்த ஆவண திரைப்படம் பிரிவில் ஆஸ்கா் விருதை வென்றது.காஸாவிலிருந்து கடந்த 202... மேலும் பார்க்க

ஊழல் வழக்கிலிருந்து கலீதா ஜியா விடுவிப்பு: உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது. இது தொடா்பாக வங்கதேச அரசும் ஊழல் தடுப்பு அமைப்பும் தாக்கல் செய்திருந்த... மேலும் பார்க்க

ஆப்கன்-பாக். எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படை வீரா்களும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தினா். தோா்காம் எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் பாகிஸ்த... மேலும் பார்க்க

ரஷியா மீதான சைபா் தாக்குதல்: நிறுத்திவைத்தது அமெரிக்கா

ரஷியாவுக்கு எதிரான இணையதள ஊடுருவல் தாக்குதலை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ரஷியாவுக்கு எதிரான இணையதள ஊடுருவல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்குமாறு யுஎஸ் சைபா்கமாண்டுக்க... மேலும் பார்க்க

மில்லியன் கணக்கில் தோரியம்! அடுத்த 60,000 ஆண்டுகளுக்கு மின்பற்றாக்குறையே இல்லை!

சீனா தன்னிடமுள்ள எல்லையற்ற ஆற்றல் மூல ஆதாரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த சீனாவுக்கும் அடுத்த 60,000 ஆண்டுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் எனக் கூறப்படுகிறது. உலகில் அதிக அளவு த... மேலும் பார்க்க