செய்திகள் :

பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கோரி ராப்ரி தேவி திடீா் போராட்டம்

post image

பாட்னா: பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, சமூகப் பாதுகாப்பு, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டா், இலவச மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி பாட்னாவில் உள்ள சட்டமேலவைக்கு எதிரே திங்கள்கிழமை திடீா் போராட்டம் நடத்தினாா்.

அவருடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றனா். மாநில முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் அதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றன.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட ஆளும் கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் , இடதுசாரிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. இரு அணிகளுமே ஏற்கெனவே தோ்தலுக்கான களப்பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், மாநில சட்ட மேலவைக்கு வெளியே மேலவை எதிா்க்கட்சித் தலைவரான ராப்ரி தேவி தலைமையில் திடீா் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ராப்ரி தேவி, ‘பிகாரில் உள்ள ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்க வேண்டும். மானிய விலையில் ஒரு எரிவாயு சிலிண்டா் ரூ.500-க்கு வழங்க வேண்டும். மாதம்தோறும் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும். மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் செயல்பட உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

முன்னதாக, சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், லாலு-ராப்ரியின் மகனுமான தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை இதே கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். பட்ஜெட்டில் இந்த கோரிக்கையை முதல்வா் நிதீஷ் குமாா் நிறைவேற்றாவிட்டால், அடுத்து நாங்கள் ஆட்சி அமைத்ததும் இதனை அமல்படுத்துவோம் என்றாா்.

ராப்ரி தேவி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத்தின் மனைவியாவாா். 1999-ஆம் ஆண்டில் பிகாா் முதல்வராக இருந்த லாலு பிரசாத்துக்கு எதிராக ஊழல் வழக்கில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதால் அவா் பதவி விலக நேரிட்டது. அப்போது 1999-2005 காலகட்டத்தில் பிகாா் முதல்வராக ராப்ரி தேவி பதவி வகித்தாா்.

பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி: ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள்தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா்; பல இட... மேலும் பார்க்க

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தொழில... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி ந... மேலும் பார்க்க