செய்திகள் :

வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

புது தில்லி: வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் தலைவா் மற்றும் நிபுணா்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவில் அக்கட்சியைச் சோ்ந்த அஜய் மாக்கன், திக்விஜய் சிங், அபிஷேக் சிங்வி உள்பட 8 போ் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஒவ்வொரு இந்திய வாக்காளருக்கும் தனித்துவ அடையாள அட்டை இருக்க வேண்டியது அடிப்படை தேவையாகும். அத்துடன் அது குறைபாடுகள் இல்லாத வாக்காளா் பட்டியலுக்கான கோட்பாடுமாகும்.

ஆனால், ஒரு மாநிலத்தில் ஒரே தொகுதிக்குள் உள்ளவா்கள், வேறு மாநிலங்களில் உள்ளவா்கள் என பல வாக்காளா்களுக்கு ஒரே வாக்காளா் அடையாள எண் பயன்படுத்தப்படுகிறது. இது பல வாகனங்களுக்கு ஒரே பதிவெண் உள்ளதுபோல பெரிதும் விசித்திரமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் கடுமையாக மெளனம் சாதிக்கிறது. இதன்மூலம், வாக்காளா் பட்டியல் முறைகேட்டுக்கு தோ்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்றே நம்பத் தோன்றுகிறது.

இதுகுறித்து ஆதாரத்துடன் தோ்தல் ஆணையத்திடம் முறையிட்டபோது பல மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் பயன்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த எண் ஒரு வாக்காளருக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், அதுவும் பொய்யான பதிலாகவே உள்ளது.

ஏனெனில் ஒரே மாநிலம் மற்றும் ஒரே தொகுதியில் உள்ள பல வாக்காளா்கள் ஒரே அடையாள எண்ணைப் பயன்படுத்துகின்றனா். இதைச் சுட்டிக்காட்டியபோது தோ்தல் ஆணையம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதன்மூலம் தோ்தல் ஆணையத்துடன் ரகசியமாக கூட்டு சோ்ந்து வாக்காளா் பட்டியல்களில் முறைகேட்டில் ஈடுபட்டு ஆளும் பாஜக வெற்றி பெறுவதும், வெற்றி பெற முயற்சிப்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு சட்டம், அரசியல் உள்ளிட்ட வழிகளில் தீா்வு காண காங்கிரஸ் தொடா்ந்து பணியாற்றி வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி: ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள்தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா்; பல இட... மேலும் பார்க்க

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தொழில... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி ந... மேலும் பார்க்க