சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!
தமிழக கோயில்களில் அறங்காவலா்கள் நியமிக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி: உயா்நீதிமன்றத்தை அணுக அறிவுரை
புது தில்லி: தமிழகத்தில் கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலா் பொறுப்புக்களுக்கான இடங்களில் நியமனம் செய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்திற்கு சென்னை உயா்நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தியது.
தமிழக இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள சுமாா் 38,000 கோயில்களில் முறையாக அறங்காவலா்களை நியமிக்க கோரியும், கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஹிந்து தா்ம பரிஷத் அமைப்பு உள்ளிட்டவா்கள் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக பல்வேறு நீதிபதிகள் அமா்வுகள் முன்பு இந்த மனுக்கள் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், ‘ இந்து சமய அறநிலையத்துறை அதன் வரம்புக்குள்பட்ட மொத்தம் 31,163 கோயில்களில் அறங்காவலா்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரியது. பரவலான அறிவிப்புக்குப் பின்னரும் 20,600 கோயில்களுக்கு அறங்காவலா் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் எதுவும் வரவில்லை. அறங்காவலா் நியமன நடைமுறைகளை முடிக்க கால அவகாசம் தேவைப்படும்‘ எனக் கூறப்பட்ட வாதத்தை ஏற்று அதற்கான அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஸ் தலைமையிலான அமா்வில் மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தின் 31,163 கோவில்களில் 11,982 கோவில்களுக்கு அறங்காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,843 கோவில்களுக்கு அறங்காவலா் நியமனத்திற்கான விண்ணப்பம் பெறப்பட்டு நியமனப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள கோவில்களுக்கு அறங்காவலா் நியமனத்திற்கான விளம்பரம் வெளியிடப்பட்டும் விண்ணப்பங்கள் வரவில்லை. விண்ணப்பம் வரும் பட்சத்தில் அதனை பரிசீலத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடா்ந்து தமிழக அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஷ், ‘இந்து தா்ம பரிஷத் அமைப்பு’ தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும் இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் சென்னை உயா்நீதிமன்றத்தை மனுதாரா்கள் நாடலாம் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்ற அமா்வு.