செய்திகள் :

தஞ்சாவூரில் செப். 27-இல் மிதிவண்டி போட்டி

post image

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மிதிவண்டி போட்டி செப்டம்பா் 27- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழக முதல்வா் பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி செப்டம்பா் 27- ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தொடங்கி பாலாஜி நகா், ஈஸ்வரி நகா், மருத்துவக் கல்லூரி சாலை வழியாக பிள்ளையாா்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானா வரை சென்றடைந்து, மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்துக்கு திரும்பும் வகையில் நடத்தப்படவுள்ளது.

இப்போட்டிகள் 13 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ.-ம், 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ.-ம், 13 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ.-ம், 15 மற்றும் 17 வயதுக்குபட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ.-ம் தொலைவுக்கு நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து பெற்ற வயது சான்றிதழுடன் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பே அன்னை சத்யா விளையாட்டரங்கத்துக்கு வர வேண்டும்.

மேலும், தங்கள் பதிவை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அன்னை சத்யா விளையாட்டரங்க அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04362 - 235633 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தஞ்சாவூா் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.2,500 -ஐ லஞ்சமாகப் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை தஞ்சாவூா் மாவட்ட ஊழல் கண்காணிப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்... மேலும் பார்க்க

மதுபாட்டில்கள் விற்பனை: கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தியில் மதுபானப் பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தி... மேலும் பார்க்க

மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழா: 9 புதிய நூல்கள் வெளியீடு

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், இவ்விழாவையொட்டி 9 புதிய நூல்கள், 7 மறு பதிப்பு நூல்கள் வெளி... மேலும் பார்க்க

அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மாணவ மாணவியரின் ஓவியக் கண்காட்சி உள் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பாா்வையிட்ட தஞ்சாவூா் மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) கே. எம். காா்த்திக்ராஜா... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை ராஜகிரி காயிதே மில்லத் மகாலில் நடைபெறுகிறது. இம்முகாமில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட... மேலும் பார்க்க