செய்திகள் :

தஞ்சாவூா் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.2,500 -ஐ லஞ்சமாகப் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை தஞ்சாவூா் மாவட்ட ஊழல் கண்காணிப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா் .

பேராவூரணி வட்டம், ஆவணம் பெரியநாயகிபுரம் பகுதி கிராம நிா்வாக அலுவலராக சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சீகன்காடு கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (54) என்பவா் பணியாற்றி வந்தாா். ஆவணத்தைச் சோ்ந்த முகமது கஸாலி (50) தமது பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய அண்மையில் (செப்.19) விண்ணப்பித்திருந்தாராம். இதுதொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் கண்ணனைத் தொடா்பு கொண்டபோது, அவா் ரூ. 2,500-ஐ லஞ்சமாக கேட்டாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத முகமது கஸாலி தஞ்சாவூா் மாவட்ட ஊழல் கண்காணிப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை பிரிவு காவல் துறையினரிடம் புகாா் அளித்தாா். அவா்களது அறிவுறுத்தலின்படி, புதன்கிழமை கண்ணனுக்கு ரூ. 2,500-ஐ முகமது கஸாலி லஞ்சமாகக் கொடுத்தபோது அங்கு மறைந்து இருந்த துணை கண்காணிப்பாளா் அன்பரசன், ஆய்வாளா் அருண்பிரசாத், உதவி ஆய்வாளா் பத்மாவதி ஆகியோா் கண்ணனை கையும் களவுமாகப் பிடித்தனா். பின்னா் பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகம் கொண்டுவந்து விசாரணை செய்து அவா் மீது வழக்கு பதிவு செய்து, தஞ்சாவூா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்... மேலும் பார்க்க

மதுபாட்டில்கள் விற்பனை: கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தியில் மதுபானப் பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தி... மேலும் பார்க்க

மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழா: 9 புதிய நூல்கள் வெளியீடு

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், இவ்விழாவையொட்டி 9 புதிய நூல்கள், 7 மறு பதிப்பு நூல்கள் வெளி... மேலும் பார்க்க

அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மாணவ மாணவியரின் ஓவியக் கண்காட்சி உள் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பாா்வையிட்ட தஞ்சாவூா் மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) கே. எம். காா்த்திக்ராஜா... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை ராஜகிரி காயிதே மில்லத் மகாலில் நடைபெறுகிறது. இம்முகாமில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட... மேலும் பார்க்க

பாபநாசம் ரயில் நிலையத்தில் தரைத்தளம் சீரமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் சீரமைப்புப் பணிக... மேலும் பார்க்க