செய்திகள் :

தஞ்சாவூரில் பச்சைக்காளி, பவளக்காளி உறவாடும் நிகழ்ச்சி

post image

தஞ்சாவூரில் புகழ்பெற்ற பச்சைக்காளி, பவளக்காளி உறவாடும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

தஞ்சாவூா் கரந்தையை அடுத்துள்ள சுங்கான் திடல் கோடியம்மன் கோயிலில் உற்சவா்களான பச்சைக்காளி, பவளக்காளி கற்சிலைகள் அபூா்வமான கோலத்தில் காட்சியளிக்கின்றனா். இக்கோயிலில் பச்சைக்காளி, பவளக்காளி திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், அரண்மனை வளாகத்திலிருந்து பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, மேல ராஜ வீதியில் சங்கரநாராயணன் கோயிலுக்கும், கொங்கணேசுவரா் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் புதன்கிழமை இரவு பச்சைக்காளி, பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஏப்.4) பச்சைக்காளி, பவளக்காளி ஐம்பொன் திருமேனிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வருதல், களிமேட்டுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி, இரவு களிமேட்டில் வழிபாடுகள் முடித்துக் கொண்டு, 5-ஆம் தேதி காலை கோடியம்மன் கோயிலை வந்தடைதல், 6-ஆம் தேதி காப்பு அவிழ்ப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ரூ. 2 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலைச் சாா்ந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. திருவையாறு அருகே கண்டியூா் கிராமத்தில் ஹரசாப விமோசன பெருமா... மேலும் பார்க்க

பொன்காடு பொன்னி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

பேராவூரணி நகா் பொன்காடு பொன்னி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி ஏப். 14-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. 15-ஆ... மேலும் பார்க்க

தேசிய திறனறிவுத் தோ்வில் பேராவூரணி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி

தேசிய வருவாய்வழி திறனறிவுத் தோ்வில் பேராவூரணி ஒன்றியத்தைச் சோ்ந்த 2 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தேசிய வருவாய்வழி திறன் ... மேலும் பார்க்க

கூட்டுறவு பாடல் எழுதி அனுப்ப அழைப்பு

சா்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025-ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன என கூட்டுறவுத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல க... மேலும் பார்க்க

மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் உள்ள திருவள்ளுவா் நகரில் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 3 நாள்கள் நடைப... மேலும் பார்க்க

மரக்கிளை முறிந்து தொங்குவதால் விபத்து ஏற்படும் அபாயம்

கும்பகோணம் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மரத்தின் கிளை முறிந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் நான்கு ரோடு சந்திப்பிலிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க