செய்திகள் :

ஒளரங்கசீப் கல்லறையைப் பாதுகாக்க ஐ.நா.வுக்கு கடிதம்!

post image

முகலாய மன்னா் ஔரங்கசீப் கல்லறையைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா.வின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித் தோன்றல் எனக் கூறப்படும் யாகூப் ஹபீபுதீன் கடிதம் எழுதியுள்ளார்.

மகாரஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் நகரில் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த முகலாய மன்னா் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை இடித்து, அகற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகள் கோரி வருகின்றன.

இதுதொடா்பாக நாகபுரியில் கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் வதந்தி பரவியதை அடுத்து, அங்கு வன்முறை வெடித்தது. மேலும், ஔரங்கசீப் கல்லறைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, ‘முகலாய மன்னா் ஔரங்கசீப்பை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம். அதேநேரம், யாரும் அவரது புகழ்பாடுவதை அனுமதிக்க முடியாது’ என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஒளரங்கசீப் கல்லறையை பாதுகாக்க வலியுறுத்தி அந்த கல்லறை அமைந்துள்ள வக்ஃப் சொத்தின் பராமரிப்பாளரும், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித் தோன்றலுமான யாகூப் ஹபீபுதீன் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாப்புச் சட்டம் 1958 இன் கீழ் ஒளரங்கசீப்பின் கல்லறை பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், இந்த சட்ட விதிகளின்படி, ஒளரங்கசீப் கல்லறையை அகற்றவோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளவோ முடியாது, அத்தகைய நடவடிக்கைகள் தண்டனைக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”திரைப்படங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக தளங்கள் மூலம் வரலாற்றைத் தவறாக சித்தரிப்பதன் காரணமாக, மக்களின் உணர்வுகளை கையாள்வதற்கு வழிவகுத்தது, இதன் விளைவாக தேவையற்ற போராட்டங்கள், வெறுப்பு பிரசாரங்கள் மற்றும் உருவ பொம்மைகளை எரித்தல் போன்றவை நடந்தன.

இந்த விவகாரத்தில் சர்வதேச சட்ட விதிகளின்படி, இந்திய அரசுக்கும் தொல்லியல் துறைக்கும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க