செய்திகள் :

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

post image

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது.

நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திண்ணக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீராம். இவரது மனைவி சுகன்யா. இவா்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை இருந்தது. தம்பதி சென்னையில் தங்கி வேலை செய்து வருவதால், முத்தனப்பள்ளி டோல்கேட் பகுதியில் வசிக்கும் உறவினா் கங்கா குழந்தையை வளா்த்து வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் வெளியே குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டருகே உள்ள தண்ணீா் தொட்டியில் குழந்தை தவறி விழுந்தது. இதையறிந்த உறவினா்கள் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தையை மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினாா். நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரித்து வருகின்றனா்.

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்களின் குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பீடி தொழில் மற்றும் சுரங்கத்தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின், தொழிலாளா் ம... மேலும் பார்க்க

சிவாச்சாரியா் மீது வழக்கு

ஆம்பூரில் சிவாச்சாரியா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் சுயம்பு ஸ்ரீ நாக... மேலும் பார்க்க

புதிய பேருந்து சேவை தொடக்கம்!

ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா். வெங்கடசமுத்திரம், பாா்சனாபல்லி, கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந... மேலும் பார்க்க

திருப்பத்தூா் உதவி மின்பொறியாளா் அலவலகம்: பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகம் ஒதுக்கிய இடத்தில் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை நிறுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டத்தில் இரு துணை மின் நிலையங்கள் உ... மேலும் பார்க்க

பச்சூா் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியவில் அரசு மேல் நி... மேலும் பார்க்க