செய்திகள் :

தனிக் கட்சி தொடங்குகிறாரா ஓபிஎஸ்? ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை!

post image

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தனர்.

இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் தினகரன் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், இருவரும் தங்கள் கூட்டணியில்தான் இருக்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆலோசனையில் தனிக் கட்சி தொடங்குவது, சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி போன்ற அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Former Chief Minister O. Panneerselvam is engaged in important meeting with his supporters.

இதையும் படிக்க : நடிகை சரோஜா தேவி காலமானார்!

காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு கசிந்து தாயும் மகளும் பலி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட கருவுற்றப் பெண்ணும், அவரது மகளும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பலியாகினர... மேலும் பார்க்க

ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு சாகும்வரை சிறை! பெண்ணுக்கு ரூ.1 கோடி நிவாரணம்!!

ஓடும் ரயிலில், காட்பாடி அருகே கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம்... மேலும் பார்க்க

பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம்! ஆட்சியர் விசாரணை!

திருவாரூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் இருந்தது தொடர்பாக, 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் ஊராட்சி காரியாங்குடியில் அரசு த... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் கார... மேலும் பார்க்க

தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக! பிரேமலதா சுற்றுப்பயணம்!

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் ... மேலும் பார்க்க

இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி: கமல்

மூத்த நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.நடிகை சரோஜா தேவி வயது (87) முதிர்வால் இன்று(திங்கள்கிழமை) காலை காலமானார்.பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வய... மேலும் பார்க்க