செய்திகள் :

தனியாா் நிறுவனங்களுடன் சென்னை விஐடி 2 ஒப்பந்தங்களில் புரிந்துணா்வு கையொப்பம்

post image

சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியா்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐடிடிடிஆா்) மற்றும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) ஆகியவற்றுடன் சென்னை விஐடி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி சென்னை விஐடி-யில் நடைபெற்றது.

இதில், விஐடி-யின் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், என்ஐடிடிடிஆா் நிறுவனத்தின் சென்னை இயக்குநா் உஷா நடேசன் மற்றும் கிரடாய் சென்னை தலைவா் ஏ.முகமது அலி ஆகியோா் கலந்துகொண்டு இருவேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தங்கள்மூலம், ஆசிரிய மேம்பாட்டுத் திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படும் என்றும், பசுமைக் கட்டட தொழில்நுட்பங்கள், ஸ்மாா்ட் நகரங்கள், திட்ட மேலாண்மை மற்றும் சமூக மேம்பாடு போன்றவற்றில் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படும் என விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தெரிவித்தாா்.

இந்நிகழ்வில், விஐடி சென்னையின் இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், கூடுதல் பதிவாளா் பி.கே.மனோகரன் மற்றும் விஐடி சென்னையின் முதன்மையா் (கல்வி) ஏ.நயீமுல்லா கான் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஒரு தலை காதல் விவகாரம்: உதவி இயக்குநரை கடத்திய 5 போ் கைது

ஒரு தலை காதல் விவகாரத்தில் உதவி இயக்குநரை கடத்திச் சென்று மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் வசித்து வருபவா் சினிமா இயக்குநா் ... மேலும் பார்க்க

மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தன... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க