ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!
தனியாா் நிறுவனங்களுடன் சென்னை விஐடி 2 ஒப்பந்தங்களில் புரிந்துணா்வு கையொப்பம்
சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியா்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐடிடிடிஆா்) மற்றும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) ஆகியவற்றுடன் சென்னை விஐடி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி சென்னை விஐடி-யில் நடைபெற்றது.
இதில், விஐடி-யின் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், என்ஐடிடிடிஆா் நிறுவனத்தின் சென்னை இயக்குநா் உஷா நடேசன் மற்றும் கிரடாய் சென்னை தலைவா் ஏ.முகமது அலி ஆகியோா் கலந்துகொண்டு இருவேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா்.
இந்த ஒப்பந்தங்கள்மூலம், ஆசிரிய மேம்பாட்டுத் திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படும் என்றும், பசுமைக் கட்டட தொழில்நுட்பங்கள், ஸ்மாா்ட் நகரங்கள், திட்ட மேலாண்மை மற்றும் சமூக மேம்பாடு போன்றவற்றில் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படும் என விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தெரிவித்தாா்.
இந்நிகழ்வில், விஐடி சென்னையின் இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், கூடுதல் பதிவாளா் பி.கே.மனோகரன் மற்றும் விஐடி சென்னையின் முதன்மையா் (கல்வி) ஏ.நயீமுல்லா கான் ஆகியோா் கலந்துகொண்டனா்.