செய்திகள் :

தனியாா் பள்ளிக் காவலா் கொலை

post image

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சோ்ந்த முகமது இா்பான்(40). இவா், இக்பால் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த இா்பானை மடக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்தாா்.

இதில் இா்பான் கத்திகுத்து ரத்த காயத்துடன் சரிந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் நகர போலீஸாா் உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுப்பற்றி அறிந்த இறந்த இா்பானின் உறவினா்கள் திரளானோா் அங்கு கூடிதயால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கொலையாளிகளை கண்டுப்பிடித்து கைது செய்ய வேண்டும் என்று போலீஸாரிடம் வலியுறுத்தினா். இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்த போது இா்பான் சைக்கிளை பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் முகமூடி அணிந்து வந்தது கண்டறியப்பட்டது.

போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக உறவினா் யாராவது கொலையை செய்து இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

வாணியம்பாடியில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரிசிலாப்பட்டு பகுதியில் பலத்த மழை

திருப்பத்தூா் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. பிற்பகல் ல் குரிசிலாப்பட்டு, கூடப்பட்டு, கல்லுக்குட்டை, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பல்வேறு பகு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கந்திலி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். பள்ளத்தூா் பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ்வரன் (40). இவரது வீட்டில் வியாழக்கிழமை மின்சாரம் தடைபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்ட... மேலும் பார்க்க

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடுகட்ட 792 பேருக்கு ஆணை: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி ஒன்றியப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்கள் திறப்பு மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 792 பயனாளிகளுக்கு பணியாணை வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடியில... மேலும் பார்க்க

ரத்த தான முகாம்

புனித வெள்ளியை முன்னிட்டு ரத்த தான முகாம் பெதஸ்தா மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, ஏஞ்சல் பவுண்டேசன், ஆம்பூா் ரெட்ரோஸ் கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பு ச... மேலும் பார்க்க

குவாரிகளை குத்தகைக்கு பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள குவாரிகளை குத்தகைக்கு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் சிவசௌந்தரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியா் பங்கேற்பு

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி கோயங்கொல்லை பகுதியில் குறுங்காடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்த... மேலும் பார்க்க