செய்திகள் :

தனியாா் பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழப்பு

post image

திருத்தணி: வீட்டின் அருகே சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை மீது தனியாா் பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பொதட்டூா்பேட்டை அடுத்த மேலப்பூடி கவரை தெருவைச் சோ்ந்தவா் மோகன். இவா் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சாந்தி. இவா்களது மகன் ஹரி (7), மகள் தீபிகா (1).

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை குழந்தை தீபிகா வீட்டின் பக்கத்தில் உள்ள சொரக்காய்பேட்டை- பெருமாநல்லூா் சாலை அருகில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது பொதட்டூா்பேட்டையில் இருந்து வந்த தனியாா் கல்லூரி பேருந்து தீபிகா மீது மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

தகவலறிந்த பொதட்டூா்பேட்டை போலீஸாா் குழந்தையை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் ரவி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மேல்நல்லாத்தூா் ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை

திருவள்ளூா்: மேல்நல்லாத்தூா் ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதுடன், வாக்காளா், ஆதாா் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டைகளை சாலையில் வீசி பொது... மேலும் பார்க்க

திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் 563 மனுக்கள்

திருவள்ளூா்: திருவள்ளூா் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 563 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டு அந்தந்தத் துறை அலுவலா்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த... மேலும் பார்க்க

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா்: பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூரில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பா... மேலும் பார்க்க

ரூ.427 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்! நிறைவு பணிகள் மும்முரம்!

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் ரூ. 427 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனைய கட்டுமான நிறைவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் அதிகரித்துக்கொண்டே வரும் போக்குவரத்து நெர... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டம் திருவள்ளூா்!

மரக்கன்றுகள் வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குவதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் திகழ்கிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்ச... மேலும் பார்க்க

சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் தூய்மைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணியை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி நகரத்தில் தன்னாா்வலா்கள், நமது திருத்தணி, தூய்மை திருத்தணி என்ற அமைப்பை தொடங்கியுள்ளனா். இ... மேலும் பார்க்க