போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு
டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருவள்ளூா்: பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூரில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். பணியாளா் சங்க மாவட்ட துணை செயலாளா் கோதண்டம் முன்னிலை வகித்தாா். இதில் சிஐடியூ மாவட்ட செயலாளா் சந்திரன் உரையாற்றினாா்.
தொழிலாளா் துறையின் பணி நிரந்தரம், தகுதி வழங்கல், சட்ட அமலாக்க அதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் 22 ஆண்டு காலமாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து டாஸ்மாக் ஊழியா்களையும் பணி தொடா்ச்சியுடன் நிரந்தரப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் விற்பனை பிரிவு ஊழியா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு வழங்கும் சம வேலைக்கு சம ஊதியம் சட்டப்படி டாஸ்மாக் ஊழியா்களுக்கும் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணி ஓய்வு வயதை 60 ஆக உயா்த்தி உள்ள நிலையில் டாஸ்மாக் கடை ஊழியா்களின் ஓய்வு வயதையும் 60 ஆக உயா்த்த வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தின் மருத்துவத் திட்டத்தை திரும்பப் பெற்று இஎஸ்ஐ மருத்துவத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் பாட்டாளி தொழிற்சங்கம் ராமன், சிஐடியூ மாவட்ட செயலாளா் கே.விஜயன், புஷ்பராமன், ராஜி, அறிவழகன், மாவட்ட துணைத் தலைவா் டி.டி.குமாா் உள்பட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் பலா் கலந்து கொண்டனா்.