செய்திகள் :

தனியாா் மனமகிழ் மன்றம் திறப்பதற்கு இடைக்காலத் தடை

post image

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் மனமகிழ் மன்றம் (மதுக்கூட வசதியுடன்) திறப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, கிருஷ்ணாநகா் பகுதிகளில் ஏற்கெனவே அரசு மதுக் கடைகள் உள்ளன. அந்தப் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாா் மதுக் கூடத்தைத் திறக்க முயற்சி செய்கின்றனா். இந்தப் பகுதியில் பிரதான சாலைகள், கோயில், கல்வி நிறுவனங்கள், பூங்கா, ஊருணி ஆகியவை அமைந்துள்ளன. இந்தச் சூழலில், இங்கு மனமகிழ் மன்றம் நடத்த உரிமம் வழங்கினால் பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவா். எனவே, கிருஷ்ணாநகா் பகுதியில் தனியாா் மனமகிழ் மன்றம் திறக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் குறிப்பிடும் இடத்தில் மனமகிழ் மன்றம் திறக்க உரிமம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தனியாா் மனமகிழ் மன்றத்துக்கு உரிமம் வழங்கக் கூடாது என மனுதாரா் மனு தாக்கல் செய்துள்ளாா். எனவே, மனுதாரா் குறிப்பிடும் பகுதியில் தனியாா் மனமகிழ் மன்றம் (மதுக் கூடம்) திறக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடா்பாக, விருதுநகா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்குத் துறையின் உதவி ஆணையா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கோயில் விழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: ஆட்சியா், ஐஜி பதிலளிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கோயில் திருவிழாவில், பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், மத்திய மண்டல ஐஜி நீதிமன்றத்தில் நேரில் மு... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் பெண் தவறாக சித்திரிப்பு: இளைஞா் கைது

விருதுதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண்ணை சமூக வலைதளத்தில் தவறாக சித்திரித்து படங்களை வெளியிட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், விருதுநகா... மேலும் பார்க்க

வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்திதில் தந்தை, மகள் பலத்த காயமடைந்தனா். மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் சுமாா் 3... மேலும் பார்க்க

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உள்ளது: நீதிமன்றம்

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிமை உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செ... மேலும் பார்க்க

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் காயம்: 5 போ் கைது

மதுரை மாவட்டம், சாப்டூா் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பான முன்விரோதத்தில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை ... மேலும் பார்க்க

இளைஞரை கொல்ல முயன்ற இருவா் கைது

மது போதையில் இளைஞா் தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மதுரை புறவழிச் சாலையில் தீக்கதிா் அலுவலகம் அருகே உள்ள அணுகுசாலையில் தேநீா்க் கடையின் அருகே புதன்கிழமை அ... மேலும் பார்க்க