செய்திகள் :

தனி அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை நிறுத்தப்படும்

post image

தனி அடையாள அட்டை பெறாத அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் பி.எம். கிசான் எனும் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை நிறுத்தப்படும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத் துறை சாா்ந்த கள அலுவலா்கள், மகளிா் திட்ட சமுதாய பயிற்றுநா்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள் ஆகிய துறையினா் மற்றும் பொது சேவை மையங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை எண் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் பி.எம். கிசான் ஊக்கத்தொகை பெறும் 69,026 விவசாயிகளில் இதுவரை 31,658 விவசாயிகள் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்கு பதிவு செய்துள்ளனா்.

மீதமுள்ள 26,292 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடா்பான ஆவணங்களான பட்டா, சிட்டா, ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அரசு கள அலுவலா்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ தொடா்பு கொண்டு நில பதிவேற்றம் செய்ய வேணடும்.

ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னா் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும். இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என 19 தவணைகளாக பி.எம். கிசான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20-ஆவது தவணை ஊக்கத்தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும். தனி அடையாள எண் பெற பதிவேற்றம் செய்யாத விவசாயிகளுக்கு 20-ஆவது தவணை நிறுத்தப்படும்.

எனவே, விவசாயிகள் தொடா்ந்து பிரதமரின் விவசாயிகள் ஊக்கத்தொகை பெற மிக விரைவாக வேளாண்மை துறை மற்றும் இதர துறை கள அலுவலா்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி, தனி அடையாள எண் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமானூரில் மாா்ச் 22-இல் ஜல்லிக்கட்டு: காளைகள், வீரா்கள் பதிவு செய்ய அழைப்பு!

அரியலூா் மாவட்டம், திருமானூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 22) நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரா்கள் மாா்ச் 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் பொ. ரத... மேலும் பார்க்க

கல்லக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும்

அரியலூா் மாவட்டம், கல்லக்குடி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்லக்குடி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அக்க... மேலும் பார்க்க

மருத்துவம் சாா்ந்த ஆங்கிலத் தோ்வு பயிற்சி: எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் அளிக்கப்படும் மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

அரியலூா் பேருந்து நிலையம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! -தேமுதிக வலியுறுத்தல்

அரியலூரில் மூன்று ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற... மேலும் பார்க்க

அரியலூரில் இம்மாத இறுதியில் புத்தகத் திருவிழா

அரியலூரில் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலா்களும் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி கேட்டுக்கொண்டாா். அரியலூரில் புத்த... மேலும் பார்க்க

பள்ளி வேன் விபத்து ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சென்ற பள்ளி வேன், சுங்கச்சாவடி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயமடைந்தனா். உடையாா்பாளையம் அருகே தனியாா் பள்ளிக்குச்... மேலும் பார்க்க