செய்திகள் :

தன்பாலின செயலி மூலம் பழக்கம்; உறவுக்கு அழைத்த இளைஞரை மிரட்டி கொள்ளையடித்த நண்பர்கள்.. என்ன நடந்தது?

post image

திருப்பூர் மாவட்டம் சங்கராபுரம் பாரதி நகரைச் சேர்ந்த 29 வயதான பிரசன்னா அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தன்பாலின உறவு தொடர்பான செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த பிரசன்னா, அதன் மூலம் ஆண் நண்பர்களிடம் பேசி வந்துள்ளார்.

அப்போது, அந்த செயலி மூலம் பிரசன்னா தனக்கு பழக்கமான ஒருவரை உறவுக்கு அழைத்துள்ளார். அந்த நபர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை நம்பிய பிரசன்னா அந்த செயலியில் பேசியவர் கூறிய காட்டுப்பாளையத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு நேற்றிரவு சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து அந்த இளைஞரிடம் பிரசன்னா பேச்சுக் கொடுத்துள்ளார்.

அப்போது, அந்தக் காட்டுப் பகுதியின் முட்புதருக்குள் மறைந்திருந்த மற்றொருவர், பிரசன்னா கழுத்தில் திடீரென கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 2.5 பவுன் தங்கசங்கிலி ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

கைது
கைது

இதுகுறித்து பிரசன்னா நல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பிரசன்னாவை ஏமாற்றி பணம் பறித்துச் சென்ற திருப்பூர் செரங்காடு பகுதியைச் சேர்ந்த அபிநிவாஸ் (21), மனோஜ்குமார் (21)ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

போலீசார் விசாரணையில், தன்பாலின உறவுக்காக அழைத்து பிரசன்னாவின் நகை, பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

செல்போன் செயலி மூலம் தன்பாலின உறவுக்கு அழைத்த இளைஞரிடம் பணம், நகை பறித்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலிக்காக மனைவிக்கு விவாகரத்து: சொத்துடன் வராததால் காதலனை கொடூரமாக அடித்து தெருவில் போட்ட காதலி..

மும்பை தாதரில் வசிப்பவர் ரஞ்சித் தேஷ்முக் (48). ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். அதோடு அரசு நிறுவனம் ஒன்றில் பாய்லர் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார். இவருக்கு ஷில்பா(51) என்ற பெண்ணுடன் தொடர்ப... மேலும் பார்க்க

3 வயது ஆண் குழந்தை; 12 லட்சத்திற்கு விற்க முயற்சி; 3 பெண்கள் கைது - பின்னணி என்ன?

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளது என்றும், ரூ.12 லட்சம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இதன... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் செ... மேலும் பார்க்க

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க