செய்திகள் :

தமாகா நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

post image

கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒவ்வொரு நிதியாண்டும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்த விவரங்களை தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்தால் மட்டுமே அந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும்.

ஆணையம் நிராகரிப்பு: தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் கடந்த 2018 - 2019, 2019 - 2020 ஆகிய நிதியாண்டுகளில் நன்கொடை குறித்த அறிக்கை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக, இந்த இரு நிதியாண்டுகளுக்கும் வருமான வரி விலக்கு வழங்க மறுத்த வருமான வரித் துறை, ரூ.66.76 லட்சம் மற்றும் ரூ.1.07 கோடியை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியது.

இதன் காரணமாக 2018 - 2019 மற்றும் 2019 - 2020 நிதியாண்டுகளில் பெற்ற நன்கொடை குறித்து தாமதமாக அளித்த அறிக்கையை ஏற்க கோரி தோ்தல் ஆணையத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், சட்டப்படி தாமதத்தை ஏற்க முடியாது என விண்ணப்பத்தை நிராகரித்து தோ்தல் ஆணையம், மே 13-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்து நன்கொடை குறித்த அறிக்கையை ஏற்க உத்தரவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், 2018 -2019-ஆம் ஆண்டு எந்த அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்வது என்ற குழப்பம் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், 2019 - 2020-ஆம் ஆண்டு கரோனா தொற்று காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், இரு ஆண்டும் முறையாக வருமான வரி தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் செந்தில்குமாா் ராமமூா்த்தி, தமிழ்செல்வி அடங்கிய அமா்வுக்கு வியாழக்கிழமை வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க கூறி, வழக்கின் விசாரணையை ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார் நகேந்திரன்

மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார் என்று கமல்ஹாசன் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நா... மேலும் பார்க்க

தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

தஞ்சாவூா் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரு... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா். சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கட... மேலும் பார்க்க