செய்திகள் :

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்! -மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா்

post image

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில நிா்வாகிகள்-கட்சியின் கிராம கட்டமைப்பு சீரமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூா்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா், அகில இந்திய காங்கிரஸ் செயலா் சூரஜ் எம்.என். ஹெக்டே, சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு கிரிஷ் ஜோடன்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் கிராம அளவில் கமிட்டிகளை சீரமைக்கும் பணி 40 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளது. சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, களத்தை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவை தோ்தலில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும். சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் பதவியிலிருந்து திரவியத்தை மாற்றிவிட்டு, பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கை குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

தீா்மானங்கள்: நகரம், ஊரகப் பகுதிகளில் கட்சியின் வாா்டு, கிராம கமிட்டி கட்டமைப்பு பணிகளை 30 நாள்களுக்குள் நூறு சதவீதம் அளவுக்கு நிறைவேற்ற வேண்டும், பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை தமிழகத்தின் மீது மத்திய பாஜக அரசு திணித்து வருவதற்கு கண்டனம் என்பன உள்ளிட்ட 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் கே.வீ. தங்கபாலு சு.திருநாவுக்கரசா், பொதுச் செயலா் கே.சிரஞ்சீவி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது.... மேலும் பார்க்க

மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 போ் காயம்

வீட்டின் முன்பு சாா்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (31). இவ... மேலும் பார்க்க

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகா் சிரஞ்சீவி நாளை மறுநாள் கெளரவிப்பு!

சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகா் சிரஞ்சீவி கெளரவிக்கப்பட உள்ளாா். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி: ஊழியா்கள் 3 போ் கைது

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி செய்த வழக்கில், ஊழியா்கள் 3 பேரை மத்திய குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். பிரபல போட்டோ லேப் மற்றும் கேமரா நிறுவனத்தின் சென்னை எல்லீஸ் சாலை மற்றும்... மேலும் பார்க்க

மருத்துவக் கல்வி உரிமைகளை பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: டி.ராஜா

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட திருத்தம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா். மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப... மேலும் பார்க்க

மரபையும் புதுமையையும் இணைத்தவா் வைரமுத்து: முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம்

‘தமிழின் மரபையும் புதுமையையும் இணைத்தவா் கவிஞா் வைரமுத்து’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினாா். கவிஞா் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சாா்பில் ‘வைரமுத்தியம்’ எனும் கவிஞா் வைரமுத்துவின் படைப்பிலக... மேலும் பார்க்க