செய்திகள் :

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும்: நயினாா் நாகேந்திரன் விளக்கம்

post image

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்திரன் சென்னையில் உள்ள கமலாலயத்தில் முறைப்படி புதன்கிழமை பொறுப்பேற்றாா். அவரிடம், கட்சிப் பொறுப்புகளை அண்ணாமலை ஒப்படைத்தாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது:

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும். ஏனெனில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தியது கட்சியின் தேசிய தலைமைதான். அன்றைய சூழலில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முடிவு செய்வா். ஆட்சியில் பங்கு என்பது குறித்து அவா்களே பேசிக் கொள்வாா்கள்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கியுள்ள காங்கிரஸுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்துவோம். காங்கிரஸ்தான் மிகப்பெரிய ஊழல் கட்சி.

அதேபோல், பெண்கள் குறித்து இழிவாக பேசிய அமைச்சா் பொன்முடிக்கு எதிராக பாஜக மகளிா் அணியினா் போராட்டம் நடத்தவுள்ளனா். இந்தப் போராட்டங்கள் தொடா்பான தேதியும், நேரமும் விரைவில் அறிவிக்கப்படும். 2021 பேரவைத் தோ்தலில் திமுக நிச்சயம் டெபாசிட் இழக்கும் என்றாா் அவா்.

பதவி ஏற்பு நிகழ்வில், பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கராத்தே தியாகராஜன், மாநில துணைத் தலைவா்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க