செய்திகள் :

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா?: அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி

post image

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.டி.வி. நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் ஒப்பந்தம் பெற்ற எங்களது நிறுவனம், சமையல் எண்ணெய் விநியோகம் செய்தது. இந்த வகையில் ரூ. 141 கோடியே 22 லட்சத்தை அரசு எங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைப்படி 30 நாள்களில் இந்தத் தொகையை வழங்க வேண்டும். எனவே, நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கே.டி.வி. நிறுவனம் தரப்பில், தொடா்ந்து சமையல் எண்ணெய் விநியோகம் செய்து வருவதால் ரூ.200 கோடிக்கும் மேல் அரசு தர வேண்டியுள்ளது. நிலுவைத் தொகையை வழங்காமல் அரசு அடுத்த ஒப்பந்தப்புள்ளி கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த இரு வாரங்களாக ஓய்வுக்கால பலன்கள், அரசு வழங்க வேண்டிய தொகைகள் வழங்கப்படவில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மாநிலத்தில் என்ன நடக்கிறது? மாநில அரசு முன்னுதாரணமாகத் திகழவேண்டும். இதுபோன்ற தொகைகளை வழங்காமல் இருப்பது எதைக் காட்டுகிறது? இந்தத் தொகைகளை வழங்க வேண்டாம் என அரசு இருக்கிா? அல்லது மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிா? எனக் கேள்விகளை எழுப்பினாா்.

பின்னா், இந்த வழக்கில் மனுதாரருக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

பெரியார், அண்ணா சர்ச்சை விடியோ: இந்து முன்னணிக்கு ஓபிஎஸ் கண்டனம்!

முருக பக்தர்கள் மாநாட்டில், பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சித்து விடியோ வெளியிட்ட இந்து முன்னணி அமைப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மதுரை திருப்பரங்குன்றத்தில் கடந... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ. 72,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.போர்ப்பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் இருந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக சென்னையில் தங்கம் வ... மேலும் பார்க்க

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மாநகர பேருந்து... மேலும் பார்க்க