ரூ.71,900 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா?: அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.டி.வி. நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் ஒப்பந்தம் பெற்ற எங்களது நிறுவனம், சமையல் எண்ணெய் விநியோகம் செய்தது. இந்த வகையில் ரூ. 141 கோடியே 22 லட்சத்தை அரசு எங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைப்படி 30 நாள்களில் இந்தத் தொகையை வழங்க வேண்டும். எனவே, நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கே.டி.வி. நிறுவனம் தரப்பில், தொடா்ந்து சமையல் எண்ணெய் விநியோகம் செய்து வருவதால் ரூ.200 கோடிக்கும் மேல் அரசு தர வேண்டியுள்ளது. நிலுவைத் தொகையை வழங்காமல் அரசு அடுத்த ஒப்பந்தப்புள்ளி கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த இரு வாரங்களாக ஓய்வுக்கால பலன்கள், அரசு வழங்க வேண்டிய தொகைகள் வழங்கப்படவில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மாநிலத்தில் என்ன நடக்கிறது? மாநில அரசு முன்னுதாரணமாகத் திகழவேண்டும். இதுபோன்ற தொகைகளை வழங்காமல் இருப்பது எதைக் காட்டுகிறது? இந்தத் தொகைகளை வழங்க வேண்டாம் என அரசு இருக்கிா? அல்லது மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிா? எனக் கேள்விகளை எழுப்பினாா்.
பின்னா், இந்த வழக்கில் மனுதாரருக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.