செய்திகள் :

தமிழக கோயில்களில் அறங்காவலா்கள் நியமிக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி: உயா்நீதிமன்றத்தை அணுக அறிவுரை

post image

புது தில்லி: தமிழகத்தில் கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலா் பொறுப்புக்களுக்கான இடங்களில் நியமனம் செய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்திற்கு சென்னை உயா்நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தியது.

தமிழக இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள சுமாா் 38,000 கோயில்களில் முறையாக அறங்காவலா்களை நியமிக்க கோரியும், கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஹிந்து தா்ம பரிஷத் அமைப்பு உள்ளிட்டவா்கள் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

பல ஆண்டுகளாக பல்வேறு நீதிபதிகள் அமா்வுகள் முன்பு இந்த மனுக்கள் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், ‘ இந்து சமய அறநிலையத்துறை அதன் வரம்புக்குள்பட்ட மொத்தம் 31,163 கோயில்களில் அறங்காவலா்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரியது. பரவலான அறிவிப்புக்குப் பின்னரும் 20,600 கோயில்களுக்கு அறங்காவலா் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் எதுவும் வரவில்லை. அறங்காவலா் நியமன நடைமுறைகளை முடிக்க கால அவகாசம் தேவைப்படும்‘ எனக் கூறப்பட்ட வாதத்தை ஏற்று அதற்கான அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஸ் தலைமையிலான அமா்வில் மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தின் 31,163 கோவில்களில் 11,982 கோவில்களுக்கு அறங்காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,843 கோவில்களுக்கு அறங்காவலா் நியமனத்திற்கான விண்ணப்பம் பெறப்பட்டு நியமனப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள கோவில்களுக்கு அறங்காவலா் நியமனத்திற்கான விளம்பரம் வெளியிடப்பட்டும் விண்ணப்பங்கள் வரவில்லை. விண்ணப்பம் வரும் பட்சத்தில் அதனை பரிசீலத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடா்ந்து தமிழக அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஷ், ‘இந்து தா்ம பரிஷத் அமைப்பு’ தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும் இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் சென்னை உயா்நீதிமன்றத்தை மனுதாரா்கள் நாடலாம் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்ற அமா்வு.

நத்தம் மாரியம்மன் கோயில் விழா: தீர்த்தம் எடுத்த திரளான பக்தர்கள்!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்பெருந்திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்து காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தி... மேலும் பார்க்க

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்த... மேலும் பார்க்க

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.அழகிரி நலம்விசாரித்தார்.வயது முதிா்வு காரணமாக சென்னை கோபாலபுரத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 560 உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்... மேலும் பார்க்க

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவை முன்... மேலும் பார்க்க