செய்திகள் :

தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள்!

post image

தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக நிதிநிலை 2025-26 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையைத் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழ்நாடு தொடர்ந்து இருமொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது. ஆங்கிலத்தில் துணையுடன் உலகை வலம் வருகின்றனர்.

இன்றைக்கு இந்தியாவின் முன்நோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

* ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள்!

* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் ரூ.3,500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்.

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2,200 கோடி

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 6100 கி.மீ கிராமச் சாலைகள் ரூ.2,200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

* சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாக ரூ.600 கோடி செலவில் 25,000 வீடுகள் கட்டித்தரப்படும்.

ஷாருக்கானின் அறிவுரையை நினைவுகூர்ந்த வெங்கடேஷ் ஐயர்!

ஷாருக்கான் கொடுத்த அறிவுரையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டன் வெங்கடேஷ் ஐயர் நினைவு கூர்ந்துள்ளார்.ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம... மேலும் பார்க்க

13 ஆண்டுகளுக்கு பின் சிரியாவில் ஜெர்மனி தூதரகம் மீண்டும் திறப்பு!

சிரியாவில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் ஜெர்மனி நாட்டு தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சிரியாவில் முன்னாள் அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டு போர் துவங்கிய காலத்தில் அந்நாட... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்! - ஹவுதி படைகள் அறிவிப்பு

இஸ்ரேல் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் மீது யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகின்றது. இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ்விலுள்ள பென் குரியோன் விமான நிலையத்தின் மீ... மேலும் பார்க்க

பலூசிஸ்தான்: இறந்தவர்களின் உறவினர்கள் மீது காவலர்கள் தடியடி! பெண்கள் படுகாயம்!

பாகிஸ்தான் நாட்டில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண வந்த உறவினர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடி தாக்குதலில் ஏராளமான பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவேட்டாவிலுள... மேலும் பார்க்க

மார்ச் 22-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள்(மார்ச் 22) சென்னையில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க