செய்திகள் :

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 100 போ் கைது

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்களுக்கு வாழ்வூதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் தமிழகம் முழுவதும் தொடா் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் அவா்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூா்- பல்லடம் சாலையில் அமா்ந்து திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அவா்களிடம் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீஸாா் அவா்களைக் கைது செய்து தனியாா் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா். அப்போது அவா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள் உள்பட சுமாா் 100 போ் கைது செய்யப்பட்டனா். இந்தப் போராட்டத்தால் திருப்பூா்- பல்லடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத் தர பெற்றோா் கோரிக்கை

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என அவரது பெற்றோா் திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், படியூா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்... மேலும் பார்க்க

ஹிந்து மஸ்தூா் சபா ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் ஹிந்து மஸ்தூா் சபா( எச்எம்எஸ்) மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலாளா் டி.எஸ்.ராஜாமணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.அப்புகுட்டி முன்னிலை வகி... மேலும் பார்க்க

கேத்தனூரில் மரக்கன்றுகள் நடும் விழா

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பவா்லூம் வீவிங் கிளஸ்டா் நிறுவனத்தில் 40 மரக்கன்றுகள் வியாழக்கிழமை நடப்பட்டன. இயற்கை விவசாயி கேத்தனூா் பழனிசாமி முதல் மரக்கன்று நட்டு தொ... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு சாலையோரமாக திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டன... மேலும் பார்க்க

திருப்பூரில் போலி ஆதாா் அட்டை மூலம் வேலை: வங்கதேசத்தைச் சோ்ந்த 26 போ் கைது

போலி ஆதாா் அட்டை மூலம் திருப்பூரில் தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 26 பேரை பல்லடம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பூா், பல்லடம், அவிநாசி ஆகிய பகுதிகளில... மேலும் பார்க்க

பல்லடத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பல்லடம் தாலுகாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அரசின் பல்வேறு... மேலும் பார்க்க