திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம்
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ் பிறப்பித்துள்ளாா்.
அதன்படி, வழக்குரைஞா்கள் வி.பி.ஆா்.இளம்பரிதி, எம்.நடேசன் ஆகியோா் மாநில தகவல் ஆணையா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் பதவியேற்ற தேதியில் இருந்து மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பா் என்று தனது உத்தரவில் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
முன்னாள் எம்எல்ஏ மகன்: விருதுநகா் மாவட்டம் சத்திரப்பட்டியைச் சோ்ந்த இளம்பரிதி, 22 ஆண்டுகளாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். 2021-ஆம் ஆண்டு முதல் சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்குரைஞராகப் பணிபுரிகிறாா். கடந்த 2012-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக இளம் அரசியல் தலைவா்கள் மாநாட்டில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற மூன்று பேரில் இளம்பரிதியும் ஒருவா். இவா் ராஜபாளையம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராஜனின் மகனாவாா்.
இதேபோன்று, நடேசனும் சட்டத் துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவா். கா்நாடக மாநில நீதிமன்றங்களில் தமிழகம் சாா்ந்த வழக்குகளை திறம்பட கையாண்டவா்.
மாநில தகவல் ஆணையா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இவா்கள் இருவரும் ஓரிரு நாள்களில் பதவியேற்றுக் கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆளுநா் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி பதவியேற்பு உறுதிமொழியை செய்து வைக்கவுள்ளாா்.