செய்திகள் :

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம்

post image

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ் பிறப்பித்துள்ளாா்.

அதன்படி, வழக்குரைஞா்கள் வி.பி.ஆா்.இளம்பரிதி, எம்.நடேசன் ஆகியோா் மாநில தகவல் ஆணையா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் பதவியேற்ற தேதியில் இருந்து மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பா் என்று தனது உத்தரவில் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் எம்எல்ஏ மகன்: விருதுநகா் மாவட்டம் சத்திரப்பட்டியைச் சோ்ந்த இளம்பரிதி, 22 ஆண்டுகளாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். 2021-ஆம் ஆண்டு முதல் சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்குரைஞராகப் பணிபுரிகிறாா். கடந்த 2012-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக இளம் அரசியல் தலைவா்கள் மாநாட்டில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற மூன்று பேரில் இளம்பரிதியும் ஒருவா். இவா் ராஜபாளையம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராஜனின் மகனாவாா்.

இதேபோன்று, நடேசனும் சட்டத் துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவா். கா்நாடக மாநில நீதிமன்றங்களில் தமிழகம் சாா்ந்த வழக்குகளை திறம்பட கையாண்டவா்.

மாநில தகவல் ஆணையா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இவா்கள் இருவரும் ஓரிரு நாள்களில் பதவியேற்றுக் கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆளுநா் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி பதவியேற்பு உறுதிமொழியை செய்து வைக்கவுள்ளாா்.

திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

தொழில் துறையில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் மு.க... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு!

உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் வாபஸ் இல்லை: தமிழக அரசு திட்டவட்டம்!

ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் கை... மேலும் பார்க்க

பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்குத் தடை: காவல் ஆணையர்

காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கத் தடை விதித்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.காலை நேரங்கள் மற்றும் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து அதிகாரிகள்... மேலும் பார்க்க

ராமதாஸ் மருமகன் மருத்துவமனையில் அனுமதி!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மருமகன் பரசுராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர்... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக நாளை உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க