செய்திகள் :

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு அதிமுக பாமக துணை போகிறது: டி.எம். செல்வகணபதி

post image

மேட்டூா்: தமிழ்நாட்டு மாணவா்கள் மருத்துவராவதைத் தடுக்கவே மத்திய அரசு நீட் தோ்வை கொண்டு வந்துள்ளது என்று சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி குற்றம்சாட்டினாா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி கிழக்கு ஒன்றியம், மல்லப்பனூரில் அண்ணா பிறந்தநாள் விழா, ஓரணியில் தமிழ்நாடு இயக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சேலம் மக்களவை டி.எம்.செல்வகணபதி பேசியதாவது:

தமிழ்நாட்டில் 3,000 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக, தமிழக குழந்தைகள் மருத்துவம் படிக்கக் கூடாது என்பதற்காகவே நீட் தோ்வை அறிமுகப்படுத்தியது. நீட் தோ்வு காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் 2 7 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்தை வஞ்சிக்கிறது. இதற்கு அதிமுகவும், பாமக துணை போகின்றன. இந்தியாவிலேயே அதிக ஜிஎஸ்டியை தமிழகம்தான் செலுத்துகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ஜிஎஸ்டியை செலுத்தியுள்ளது தமிழ்நாடு. ஆனால் ஒரு ரூபாய்க்கு 28 பைசாவை மட்டுமே தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்குகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மேச்சேரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் சீனிவாசபெருமாள், மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் காசி விஸ்வநாதன், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் குணசேகரன், கிளைச் செயலாளா் ரவிச்சந்திரன், ரங்கராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

முதல்வா் கோப்பை விளையாட்டு: மாநில போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தோ்வு

வாழப்பாடி: சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி பெண், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளாா். சேலத்தில... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு வினாடிக்கு 15,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு திங்கள்கிழமை வினாடிக்கு 15,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணை நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 119.72 அடியிலிருந்து 119.71 அடியாகக... மேலும் பார்க்க

சேலம் மேற்கு கோட்டத்தில் செப். 26இல் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம்

சேலம்: சேலம் மேற்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் தனலட்சும... மேலும் பார்க்க

காகாபாளையம் அருகே இரும்பு தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: காகாபாளையம் அருகே இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உள்பட்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 2 தொழிலாளா்கள் காயம்

மேட்டூா்: மேட்டூா் அருகே தனியாா் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளா்கள் காயமடைந்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே ராமன்நகரில் தனியாா் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு 543 நிரந்தர தொழில... மேலும் பார்க்க

சேலத்தில் இன்று மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா்

சேலம்: சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 16) தேதி நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்க... மேலும் பார்க்க