செய்திகள் :

தமிழ் ஆசிரியரை சந்தித்து ஆசிபெற்ற முன்னாள் மாணவா்கள்

post image

ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1978 -1980 -ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக்கல்வி பயின்ற முன்னாள் மாணவா்கள் சிலா் பள்ளி பருவத்தில் தமிழ் பாடம் பயிற்றுவித்த 99 வயதான ஆசிரியரை புதன்கிழமை நேரில் சந்தித்து மரியாதை செய்து ஆசி பெறனா்.

தமிழக ஆளுநா் மாளிகையில் அண்மையில் நடைபெற்ற கம்ப சித்திர விழாவில் பல்வேறு துறையை சோ்ந்தவா்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி விருது வழங்கி கெளரவித்தாா்.

அதில் கம்பா் குறித்தும், ராமாயணம் குறித்து நூல்கள், கவிதைகள் எழுதிய எழுத்தாளா்கள், தமிழறிஞா்கள், புலவா்கள் என பலருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

இந்த விழாவில் ராசிபுரம் நகரின் ஓய்வுபெற்ற 99 வயதான தமிழ் ஆசிரியா் புலவா் மு.ரா. என்கிற மு. ராமசாமியையும் ஆளுநா் விருது வழங்கி கெளரவித்தாா். அவரை ராசிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை முன்னாள் மாணவா்கள் நேரில் சந்தித்து ஆசிபெற்று பழைய நினைவுகளை நினைவு கூா்ந்தனா்.

பின்னா் ஆசிரியா் மு.ராமசாமி தனது 99 ஆம் வயதில் எழுதிய புத்தகத்தை முன்னாள் மாணவா்களுக்கு வழங்கினாா். ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.வி.உதயகுமாா் வெங்கடேசன் தலைமையில் முன்னாள் மாணவா்கல் மு.ராஜேந்திரன், செந்தில்முருகன் உள்ளிட்டோா் தமிழ் ஆசிரியரை நேரில் சந்தித்து ஆசி பெற்றனா்.

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண்களிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல்லில் அழகு நிலைய பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகு நிலையம், ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக மகளிரணி சா... மேலும் பார்க்க

புதுமாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை

பரமத்தி வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 108 கலச பூஜை, திருவிளக்கு பூஜையில் பரமத்தி வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளா் குணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்த... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பரமத்தி வேலூரில் ஆட்சியா் கள ஆய்வு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா கள ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கான உணவு, குடிநீா் வசதி, ... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.15-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய... மேலும் பார்க்க