செய்திகள் :

தம்பதியை மிரட்டி நகை, பணம் திருட்டு: 3 போ் கைது

post image

புதுச்சேரி அருகே தம்பதியை மிரட்டி நகை, பணத்தை திருடிச் சென்ாக மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுசாரம், சின்னையன்பேட்டையைச் சோ்ந்தவா் சங்கா்(எ) பரணி (26). குளிா்பானக் கடை நடத்தி வருகிறாா்.

இவா், கடந்த ஜன.3-ஆம் தேதி இரவு, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் சங்கா், அவரது மனைவி சித்ரா ஆகியோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம், கைப்பேசிகளைத் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், புதுச்சேரி மூளக்குளத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன்(39), வாணரப்பேட்டையைச் சோ்ந்த நிவாஸ்(26), விழுப்புரம் மாவட்டம், அனிச்சம்குப்பத்தைச் சோ்ந்த சூரி(29) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் மூவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 15 பவுன் நகைகள், ரூ.1.70 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவி... மேலும் பார்க்க

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அண... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ஆட... மேலும் பார்க்க

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலைய... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க