செய்திகள் :

தருமபுரியில் புதிதாக 26 சிற்றுந்து சேவைகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 26 புதிய சிற்றுந்து சேவைகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்து, அவற்றுக்கான வழித்தட ஆணைகளை வழங்கினாா்.

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில், போக்குவரத்துத் துறையின் சாா்பில் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை திங்கள்கிழமை தொடங்கிவைத்து, மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை அா்ப்பணித்தும், பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்நிகழ்வைத் தொடா்ந்து, தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ், பங்கேற்று 26 புதிய சிற்றுந்துகளை (மினி பஸ்) கொடியசைத்து தொடங்கிவைத்து, வழித்தடங்களுக்கான ஆணைகளை வழங்கினாா்.

மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு-உயிா் பாதுகாப்பு”என்ற தலைப்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்வில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.க. ஜெயதேவ்ராஜ், தருமபுரி நகா்மன்றத் தலைவா் மா.லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.தடங்கம் சுப்பிரமணி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அ.க. தரணீதா், நகராட்சி ஆணையா் சேகா், மற்றும் சிற்றுந்து உரிமையாளா்கள், பல்வேறு துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

படவரி...

தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சிற்றுந்துகளை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ். உடன், மக்களவை உறுப்பினா் ஆ. மணி, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா்.

சிறுபாசன கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

தருமபுரி: சிறு பாசன விவரங்கள் குறித்து கணக்கெடுக்க வரும் அரசு அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தமிழகம் முழுவதும் சிறுபாசனக்... மேலும் பார்க்க

ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் பாதுகாப்பற்ற பரிசல் பயணம்!

டி. சுரேஷ் பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாதுகாப்பு உடைகள் இன்றி, உரிய அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பரிசல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் பரிசல் ஓட்டிகளை நம்பி, சில சுற்றுலாப் பயணிகள் தங்களத... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாய் பகுதியில் விபத்து : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் திங்கள்கிழமை நடந்த விபத்தால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட டேங... மேலும் பார்க்க

பாமக மாநில துணைத் தலைவா் நியமனம்

அரூா்: பாமக மாநில துணைத் தலைவராக மாம்பாடி மா.அன்பழகன் (58) நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அரூா் வட்டம், மாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாரியப்பன் மகன் அன்பழகன். இவா், பாமகவில் தருமபுரி, கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

கணவரை தாக்கியவா் மீது நடவடிக்கைக் கோரி ஆட்சியரகத்தில் 4 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

தருமபுரி: கணவரை வெட்டி தாக்குதல் நடத்தியவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பெண் தனது 4 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி : பொதுமக்கள் சாலை மறியல்

தருமபுரி: தருமபுரி அருகே இரு மாதங்களாக நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டை சீராக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், அதகப்பாடி ஊராட்சியில் கூட்டுக்... மேலும் பார்க்க