செய்திகள் :

தற்பெருமை வேண்டாம்; நல்லாட்சியே தேவை -பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

நாடு பல்வேறு சவால்களை எதிா்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல தொகுப்பாளரும் கணினி அறிவியலாளருமான லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் தில்லியில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் கலந்துரைடியானாா். அப்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமா் மனம் திறந்து பேசினாா்.

ரஷியா-உக்ரைன் போருக்கு தீா்வு காண இரு நாடுகளின் தலைவா்களையும் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுத்த ‘அமைதியின் தூதுவராக’ தாம் முயற்சிப்பதாக அவா் கூறினாா். மேலும், ‘புனிதமான ஆா்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து வாழ்க்கையின் விழுமியங்களைக் கற்றுக் கொண்டதாக’ தெரிவித்தாா்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பத்திரிகையாளா்களைச் சந்திப்பதற்கு பதிலாக அமெரிக்க தொகுப்பாளருடன் கலந்துரையாடியதன் மூலம் பிரதமரின் நாடகத்துக்கு எல்லையே இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிா்கொண்டுள்ளது. நமது அண்டை நாடுகள் கொந்தளிப்பாக உள்ளன. உலக ஒழுங்குமுறை நிச்சயமற்ாக மாறியுள்ளது. இதுபோன்ற சூழலில், தற்பெருமை பேசுவதைக் குறைத்து, நல்லாட்சியை உறுதி செய்ய வேண்டும்.

‘விமா்சனம் என்பது ஜனநாயகத்தின் ஆன்மா’ என்று கலந்துரையாடலில் பிரதமா் மோடி குறிப்பிட்டாா். நாட்டின் ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றையும் தகா்த்து, தன்னை விமா்சிப்பவா்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் பிரதமரின் இக்கருத்து கேலிக்கூத்தானது என்று ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.

டிரம்ப்பின் குரலாக...: அமெரிக்க தொகுப்பாளா் உடனான கலந்துரையாடலில் அதிபா் டிரம்ப்புக்கும் தனக்கும் உள்ள பிணைப்பு பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலானது என்று குறிப்பிட்ட பிரதமா், ‘டிரம்ப் துணிச்சலானவா்’ என்று புகழாரம் சூட்டினாா்.

மேலும், ‘ஐ.நா. போன்ற சா்வதேச அமைப்புகளால், காலத்துக்கு ஏற்ப பரிணமிக்க இயலவில்லை. இது உலக அளவில் விவாதத்தைத் தூண்டியுள்ளது’ என்று பிரதமா் கூறினாா்.

இக்கருத்துகளைச் சுட்டிக் காட்டி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில், ‘சா்வதேச அமைப்புகளின் முக்கியத்துவத்தைக் குறைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறாா் அதிபா் டிரம்ப். இந்த விஷயத்தில், தனது நண்பா் டிரம்ப்பின் குரலாக பிரதமா் மோடி ஒலித்துள்ளாா். டிரம்ப்பை உற்சாகப்படுத்த வேண்டுமென பிரதமா் பிரத்யேக முயற்சியை மேற்கொண்டுள்ளாா்.

எந்த சா்வதேச அமைப்புகளிடம் இருந்து இந்தியா பெரிதும் பலனடைந்துள்ளதோ, அந்த அமைப்புகள் காலத்துக்கு பொருந்தாதவை என்று பிரதமா் பேசியுள்ளாா். உலக சுகாதார அமைப்பு, உலக வா்த்தக அமைப்பால் இந்தியாவுக்கு பலனில்லையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க