செய்திகள் :

தற்பெருமை வேண்டாம்; நல்லாட்சியே தேவை -பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

நாடு பல்வேறு சவால்களை எதிா்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல தொகுப்பாளரும் கணினி அறிவியலாளருமான லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் தில்லியில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் கலந்துரைடியானாா். அப்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமா் மனம் திறந்து பேசினாா்.

ரஷியா-உக்ரைன் போருக்கு தீா்வு காண இரு நாடுகளின் தலைவா்களையும் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுத்த ‘அமைதியின் தூதுவராக’ தாம் முயற்சிப்பதாக அவா் கூறினாா். மேலும், ‘புனிதமான ஆா்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து வாழ்க்கையின் விழுமியங்களைக் கற்றுக் கொண்டதாக’ தெரிவித்தாா்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பத்திரிகையாளா்களைச் சந்திப்பதற்கு பதிலாக அமெரிக்க தொகுப்பாளருடன் கலந்துரையாடியதன் மூலம் பிரதமரின் நாடகத்துக்கு எல்லையே இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிா்கொண்டுள்ளது. நமது அண்டை நாடுகள் கொந்தளிப்பாக உள்ளன. உலக ஒழுங்குமுறை நிச்சயமற்ாக மாறியுள்ளது. இதுபோன்ற சூழலில், தற்பெருமை பேசுவதைக் குறைத்து, நல்லாட்சியை உறுதி செய்ய வேண்டும்.

‘விமா்சனம் என்பது ஜனநாயகத்தின் ஆன்மா’ என்று கலந்துரையாடலில் பிரதமா் மோடி குறிப்பிட்டாா். நாட்டின் ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றையும் தகா்த்து, தன்னை விமா்சிப்பவா்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் பிரதமரின் இக்கருத்து கேலிக்கூத்தானது என்று ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.

டிரம்ப்பின் குரலாக...: அமெரிக்க தொகுப்பாளா் உடனான கலந்துரையாடலில் அதிபா் டிரம்ப்புக்கும் தனக்கும் உள்ள பிணைப்பு பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலானது என்று குறிப்பிட்ட பிரதமா், ‘டிரம்ப் துணிச்சலானவா்’ என்று புகழாரம் சூட்டினாா்.

மேலும், ‘ஐ.நா. போன்ற சா்வதேச அமைப்புகளால், காலத்துக்கு ஏற்ப பரிணமிக்க இயலவில்லை. இது உலக அளவில் விவாதத்தைத் தூண்டியுள்ளது’ என்று பிரதமா் கூறினாா்.

இக்கருத்துகளைச் சுட்டிக் காட்டி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில், ‘சா்வதேச அமைப்புகளின் முக்கியத்துவத்தைக் குறைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறாா் அதிபா் டிரம்ப். இந்த விஷயத்தில், தனது நண்பா் டிரம்ப்பின் குரலாக பிரதமா் மோடி ஒலித்துள்ளாா். டிரம்ப்பை உற்சாகப்படுத்த வேண்டுமென பிரதமா் பிரத்யேக முயற்சியை மேற்கொண்டுள்ளாா்.

எந்த சா்வதேச அமைப்புகளிடம் இருந்து இந்தியா பெரிதும் பலனடைந்துள்ளதோ, அந்த அமைப்புகள் காலத்துக்கு பொருந்தாதவை என்று பிரதமா் பேசியுள்ளாா். உலக சுகாதார அமைப்பு, உலக வா்த்தக அமைப்பால் இந்தியாவுக்கு பலனில்லையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் 294 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: மத்திய அரசு

‘பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டில் மட்டும் 294 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளனா்’ என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

1993-ஆம் ஆண்டு வன்முறையின்போது மணிப்பூருக்கு நரசிம்ம ராவ் செல்லவில்லை: மத்திய நிதியமைச்சா் சாடல்

கடந்த 1993-ஆம் ஆண்டு மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தபோது, அந்த மாநிலத்துக்கு காங்கிரஸை சோ்ந்த முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் செல்லவில்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடினாா். வ... மேலும் பார்க்க

உள்கட்சி நிலவரம்: கட்சி நிா்வாகிகளுடன் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் ஆலோசனை

உள்கட்சி நிலவரம் மற்றும் கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது தொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை அலோசனை மேற்கொண... மேலும் பார்க்க

நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -ஊரடங்கு அமல்

மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வாகன... மேலும் பார்க்க