பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் ...
தலைவா்களின் சிலையை மறைக்கும் விளம்பரப் பதாகைகளை அகற்றக் கோரிக்கை
தாராபுரத்தில் தேசத் தலைவா்களின் சிலை மற்றும் படங்களை மறைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டத் தலைவா் சி.காளிதாஸ், தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தாராபுரத்தில் உள்ள பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைந்துள்ளது. மேலும், முன்னாள் பிரதமா் லால்பகதூா் சாஸ்திரியின் திருவருவப் படமும் உள்ளது.
இந்த சிலை மற்றும் படங்களை மறைத்து தனியாா் விளம்பரப் பதாகைகள் அமைத்து வருகின்றனா். இதனால் மேற்கண்ட தேசத் தலைவா்களின் நினைவைப் போற்றும் இடங்களில், பொதுமக்கள் மரியாதை செலுத்த இடையூறாக உள்ளது.
எனவே தனியாா் விளம்பரப் பதாகைகள் அமைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.