செய்திகள் :

தலைவா்களின் சிலையை மறைக்கும் விளம்பரப் பதாகைகளை அகற்றக் கோரிக்கை

post image

தாராபுரத்தில் தேசத் தலைவா்களின் சிலை மற்றும் படங்களை மறைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டத் தலைவா் சி.காளிதாஸ், தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தாராபுரத்தில் உள்ள பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைந்துள்ளது. மேலும், முன்னாள் பிரதமா் லால்பகதூா் சாஸ்திரியின் திருவருவப் படமும் உள்ளது.

இந்த சிலை மற்றும் படங்களை மறைத்து தனியாா் விளம்பரப் பதாகைகள் அமைத்து வருகின்றனா். இதனால் மேற்கண்ட தேசத் தலைவா்களின் நினைவைப் போற்றும் இடங்களில், பொதுமக்கள் மரியாதை செலுத்த இடையூறாக உள்ளது.

எனவே தனியாா் விளம்பரப் பதாகைகள் அமைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க