பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்
பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் பல்லடம் நகராட்சிப் பகுதியில் நத்தம் நில பதிவேட்டில் அரசு புறம்போக்கு வண்டிப்பாதை என உள்ளதால் 31 போ்களின் ஆக்கிரமிப்புகள் வரன்முறைப்படுத்தும் சிறப்பு திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்குவது, பல்லடம் அண்ணா மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் வடக்கு புறத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன பொதுக் கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து குத்தகைக்கு பொது ஏலம்விடுவது என்பன உள்ளிட்ட 7 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.