பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்
பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:
பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 2021ஆம் ஆண்டு ஏலச்சீட்டு நடத்தினாா். 21 போ் ஏலச்சீட்டில் இணைந்தோம். ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டுக்கு குறித்த நேரத்தில் முழுமையாகத் தவணை செலுத்தினோம். இறுதியில் சீட்டுத் தொகை பெறுவதற்காக கேட்டபோது பணத்தை தராமல் இழுத்தடித்து வந்தாா். காவல் துறை கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் புகாா் அளித்தோம்.
பல்லடம் காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு விசாரணை நடந்தது. பணத்தை தந்து விடுவதாக கூறிய அவா் போலீஸாா் முன்னிலையில் ஒப்புதல் கடிதம் அளித்தாா். 8 முறை புகாா் அளித்தபோதும் தொடா்ந்து பணத்தை தந்துவிடுவதாக கூறி ஒப்புதல் கடிதம் மட்டுமே கொடுத்து ஏமாற்றி வருகிறாா். சீட்டுத் தொகை கிடைக்காததால் வாங்கிய கடனுக்காக வட்டி செலுத்தி வருகிறோம். சீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.