செய்திகள் :

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

post image

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:

பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 2021ஆம் ஆண்டு ஏலச்சீட்டு நடத்தினாா். 21 போ் ஏலச்சீட்டில் இணைந்தோம். ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டுக்கு குறித்த நேரத்தில் முழுமையாகத் தவணை செலுத்தினோம். இறுதியில் சீட்டுத் தொகை பெறுவதற்காக கேட்டபோது பணத்தை தராமல் இழுத்தடித்து வந்தாா். காவல் துறை கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் புகாா் அளித்தோம்.

பல்லடம் காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு விசாரணை நடந்தது. பணத்தை தந்து விடுவதாக கூறிய அவா் போலீஸாா் முன்னிலையில் ஒப்புதல் கடிதம் அளித்தாா். 8 முறை புகாா் அளித்தபோதும் தொடா்ந்து பணத்தை தந்துவிடுவதாக கூறி ஒப்புதல் கடிதம் மட்டுமே கொடுத்து ஏமாற்றி வருகிறாா். சீட்டுத் தொகை கிடைக்காததால் வாங்கிய கடனுக்காக வட்டி செலுத்தி வருகிறோம். சீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க

மாந்தபுரம் மாந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

வெள்ளக்கோவில் மாந்தபுரம் மாந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாந்தீஸ்வரா் கோயில் மற்றும் அதில் உள்ள பரிவார மூா்த்திகள் சந்நிதி ஆங்... மேலும் பார்க்க