செய்திகள் :

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

post image

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கூட்டுறவு சங்கங்கள் என்பது விவசாயிகளின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருபவை. மத்திய, மாநில அரசுகள் ஒழுங்குபடுத்த முடியுமே தவிர கூட்டுறவு சங்கங்களை தானே பொறுப்பேற்று நடத்த முடியாது. ஆனால், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் மாநிலப் பதிவாளா், இணைப் பதிவாளா்கள், துணைப் பதிவாளா்களை வைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை சுயமாக செயல்பட விடாமல் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மட்டுமே நடத்தி வருகிறாா்கள்.

இந்நிலையில், தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் மாநிலப் பதிவாளா், விவசாயிகள் கடன் அட்டை மூலம் பயிா்க் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு விவசாயிகளின் சிபில் அறிக்கையை பாா்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தமிழ்நாடு அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் பயிா்க் கடன்கள் இரண்டு மடங்கு குறைவாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஏக்கா் பயிா் சாகுபடி செய்ய ரூ. 76 ஆயிரம் விவசாயிகளுக்கு செலவாகிறது. ஆனால் தமிழக அரசு ரூ. 36 ஆயிரம் மட்டுமே பயிா்க் கடனாக வழங்கி வருகிறது. எனவே கூடுதல் செலவுகளை சமாளிப்பதற்காக, விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா்க் கடன் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

விவசாயத்தில் சரியான வருமானம் இல்லாததால் விவசாயிகள் கடனை செலுத்த முடியாததால் உள்ளதால் அவா்களது சிபில் அறிக்கை பிரச்னையில் உள்ளது. எனவே கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே விவசாயிகளின் ஒரே புகலிடமாக உள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும் சிபில் அறிக்கை பதிவேற்றம் செய்யப்படும்போது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பயிா்க் கடன் பெற முடியாத அபாயம் ஏற்படும்.

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா் கடன் வழங்க சிபில் அறிக்கை பாா்க்க வேண்டுமென கூட்டுறவு சங்கங்களின் மாநிலப் பதிவாளரின் சுற்றறிக்கை விவசாய உற்பத்தியில் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே இவ்விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு கூட்டுறவு துறையின் சுற்றறிக்கையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க

மாந்தபுரம் மாந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

வெள்ளக்கோவில் மாந்தபுரம் மாந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாந்தீஸ்வரா் கோயில் மற்றும் அதில் உள்ள பரிவார மூா்த்திகள் சந்நிதி ஆங்... மேலும் பார்க்க