செய்திகள் :

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க!: முதல்வர் ஸ்டாலின்

post image

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி அவரது புகழ் வாழ்க என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று!

தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்!

சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர்!

சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தி அவர்களே பாராட்டிய ‘குன்றக்குடிக் கிராமத் திட்டம்’ கொண்டுவந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர்!

பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்!

இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர்!

முத்தமிழறிஞர் கலைஞரின் விருப்பத்தின் வழியே தமிழ்நாடு சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகி, மேலவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகப் பேசிய பெருந்தகையாளர்!

தமிழ்ச்சமூகத்தின் சமூகவியல் உள்ளடக்கிய இறையியல் அடையாளமாக விளங்கும் திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 45-ஆவது மகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க!

அவரது வழியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும்! என கூறியுள்ளார்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கருணாநிதியுடன் தவத்திரு குன்றக்குடி அடிகளார் இருக்கும் புகைப்படத்தையும் முதல்வர் ஸ்டாலின் இணைத்துள்ளார்.

ஆக.1 முதல் கனடா பொருள்களுக்கு 35% வரி அமல்! - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Chief Minister M.K. Stalin has said that on the centenary of the death of Tavathiru Kundrakudi Adigal, his fame will be long.

எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்படாயோ உங்களுக்கு தேவையில்லை. உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!

திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி

தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மருதக்குடி கிர... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு முடிவு 3 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்

தமிழ்நாடு முழுவதும் கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் பங்கேற்கும் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு ... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது

மேட்டூா்: மேட்டூா் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறதுமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 30,250 கனஅடியாக குறைந்தது. இதனால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,250 கனஅடி... மேலும் பார்க்க