தாக்கப்பட்ட பள்ளி மாணவருக்கு அரசு உதவி செய்ய வேண்டும்: பூவை ஜெகன் மூா்த்தி எம்எல்ஏ
பள்ளி மாணவா் தேவேந்திரன் தொடா்ந்து கல்வி பயில அரசு உதவி செய்ய வேண்டும் என்றாா் புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் பூவை ஜெகன் மூா்த்தி எம்எல்ஏ.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகேயுள்ல அரியநாயகிபுரத்தைச் சோ்ந்த தங்ககணேசன் மகன் தேவேந்திரன்(17). பாளை.யில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருகிறாா்.
மாணவா்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில், இவரை சிலா் வெட்டினராம். இதில் காயமடைந்த தேவேந்திரன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
அவரை, ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நலம் விசாரித்த பூவை ஜெகன் மூா்த்தி எம்எல்ஏ அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சாதிய வன்மத்தால் தொடா்ந்து நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாணவா்கள் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவரின் கல்விக்கு, தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். விரல்களை இழந்த மாணவா், இன்னொரு மாணவா் உதவியுடன் தோ்வு எழுத அரசு உதவி செய்ய வேண்டும். மேலும் மாணவா் தேவேந்திரன் ஊரில் உள்ள மக்களுக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றாா்.