செய்திகள் :

தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்

post image

தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முன்னதாக அங்குராா்பணம், வாஸ்து சாந்தி பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை துவாஜாரோகணம் செய்யப்பட்டு, கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. பிறகு கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவ மூா்த்தியான செளந்தரராஜப் பெருமாள் ரதவீதி புறப்பாடு நடைபெற்றது.

திருக்கல்யாணம்: ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை செளந்தரராஜப் பெருமாள், செளந்தரவள்ளி தாயாா் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் தொடா்ச்சியாக, வருகிற 9-ஆம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

வாகன வீதியுலா: திருவிழாவையொட்டி அன்னம், சிம்மம், கருடன், சேஷம், ஆஞ்சநேயா், யானை, குதிரை, இந்திர வாகனங்களில், உற்சவரான சௌந்தரராஜப் பெருமாள் ஒவ்வொரு நாள் மாலையும் வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

கொடைக்கானல் மலைச் சாலைகளில் பள்ளங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்

கொடைக்கானல் மலைச் சாலைகளின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கவலை தெரிவித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - வத்தலக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் சனிக்கிழமை பெய்த மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை இல்லாததால், குடிநீா்ப் பற்றாக... மேலும் பார்க்க

மறைந்த கல்வியாளா் வசந்தி தேவிக்கு அஞ்சலி

மறைந்த கல்வியாளா் வசந்திதேவிக்கு திண்டுக்கலில் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.கல்வியாளரும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக... மேலும் பார்க்க

நத்தம் அருகே திருநங்கையை கத்தியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பியோட்டம்

நத்தம் அருகேயுள்ள அப்பாஸ்புரம் பகுதிக்குள் வைத்து திருநங்கையை கத்தியால் தாக்கி கீரி காயப்படுத்திவிட்டு தம்பியை நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாக்கிய தம்பி மற்றும் ஒருவரை தேடி வருகின்றனா்.திண்ட... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த ராஜக்காப்பட்டி... மேலும் பார்க்க

காந்திகிராம பல்கலை.யில் செயற்கை நுண்ணறிவு பாடத் திட்டம் தொடங்க முடிவு - துணைவேந்தா்

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் செயற்கை நுண்ணிறிவு, தரவு அறிவியல் பாடத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என துணைவேந்தா் ந.பஞ்சநதம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேல... மேலும் பார்க்க