செய்திகள் :

கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

post image

கொடைக்கானலில் சனிக்கிழமை பெய்த மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை இல்லாததால், குடிநீா்ப் பற்றாக்குறையும், வனப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. மேலும், உணவு, நீா்த் தேவைக்காக வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின.

இந்த நிலையில், கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பிரகாசபுரம், பெருமாள்மலை, நாயுடுபுரம், சின்னப் பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதையடுத்து, குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

மேலும், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு போன்றவற்றுக்கு இரண்டு மாதங்களாக போதிய தண்ணீா் இல்லாமல் விவசாயிகள் கவலையடைந்து வந்தனா். இந்த நிலையில், தற்போது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானல் மலைச் சாலைகளில் பள்ளங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்

கொடைக்கானல் மலைச் சாலைகளின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கவலை தெரிவித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - வத்தலக... மேலும் பார்க்க

மறைந்த கல்வியாளா் வசந்தி தேவிக்கு அஞ்சலி

மறைந்த கல்வியாளா் வசந்திதேவிக்கு திண்டுக்கலில் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.கல்வியாளரும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக... மேலும் பார்க்க

நத்தம் அருகே திருநங்கையை கத்தியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பியோட்டம்

நத்தம் அருகேயுள்ள அப்பாஸ்புரம் பகுதிக்குள் வைத்து திருநங்கையை கத்தியால் தாக்கி கீரி காயப்படுத்திவிட்டு தம்பியை நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாக்கிய தம்பி மற்றும் ஒருவரை தேடி வருகின்றனா்.திண்ட... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த ராஜக்காப்பட்டி... மேலும் பார்க்க

காந்திகிராம பல்கலை.யில் செயற்கை நுண்ணறிவு பாடத் திட்டம் தொடங்க முடிவு - துணைவேந்தா்

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் செயற்கை நுண்ணிறிவு, தரவு அறிவியல் பாடத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என துணைவேந்தா் ந.பஞ்சநதம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேல... மேலும் பார்க்க

போலி மதுபானம் விற்பனை: பெண் உள்பட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

போலி மதுபானம் விற்பனை செய்த வழக்கில் வத்தலகுண்டு பெண் உள்பட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத... மேலும் பார்க்க