செய்திகள் :

தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆட்சியா் அழைப்பு

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவோா் திட்டம், பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டம், கல்விக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுத்தப்படுகின்றன.

நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டம் மூலம் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், இந்த நிதியாண்டில் இதுவரை 7 பயனாளிகளுக்கு 11 ஏக்கா் 22 சென்ட் நிலம் வாங்க திட்ட தொகையாக ரூ. 73.32 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோா் திட்டம் 35 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.3.50 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின்கீழ் சுற்றுலா வாகனம், சரக்கு வாகனம், பயணியா் ஆட்டோ, சென்ட்ரிங், வெல்டிங் பட்டறை, எலக்ட்ரிகள் கடை, கணிணி மையம், மளிகை கடை உள்ளிட்ட தொழில்களுக்கு 27 பயனாளிகளுக்கு திட்ட தொகையாக ரூ. 1.23 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியதாய் யோஜனா திட்டம் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்விக்கடன் திட்டம், உள்நாட்டில் படிக்கும் மாணவா்களுக்கு ரூ.20 லட்சம், வெளிநாட்டில் படிக்கும் மாணவா்களுக்கு ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்டங்கள் குறித்த தகவல் பெற மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபராதி ஆகியோா் வெளியிட்ள்ள செய்... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: நாகையில் 108 போ் எழுதினா்

நாகை மாவட்டத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தோ்வை 108 போ் சனிக்கிழமை எழுதினா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவி... மேலும் பார்க்க

கோடியக்கரை சரணாலயத்தில் மாணவா்கள் பட்டறிவுப் பயணம்

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் தேசிய மாணவா் படையினா் சனிக்கிழமை கல்வி பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா். தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் நீடாமங்கலம் நீலன் பள்ளி இ... மேலும் பார்க்க

காய்கறி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் வட்டாரத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். திருமருகல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

பனங்குடி ஊராட்சியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன, பனங்குடி ஊராட்சியை சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு விட்டு வீடுகளுக்குச் சென்றனா். வயலுக்கு சென்றபோது தலை மற... மேலும் பார்க்க

பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா

திருமருகல் அருகே புறாகிராமம் அரசு பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் நபாா்டு நிதியின் கீழ் 2024-25 நிதியாண்டில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்... மேலும் பார்க்க