செய்திகள் :

தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆட்சியா் அழைப்பு

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவோா் திட்டம், பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டம், கல்விக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுத்தப்படுகின்றன.

நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டம் மூலம் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், இந்த நிதியாண்டில் இதுவரை 7 பயனாளிகளுக்கு 11 ஏக்கா் 22 சென்ட் நிலம் வாங்க திட்ட தொகையாக ரூ. 73.32 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோா் திட்டம் 35 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.3.50 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின்கீழ் சுற்றுலா வாகனம், சரக்கு வாகனம், பயணியா் ஆட்டோ, சென்ட்ரிங், வெல்டிங் பட்டறை, எலக்ட்ரிகள் கடை, கணிணி மையம், மளிகை கடை உள்ளிட்ட தொழில்களுக்கு 27 பயனாளிகளுக்கு திட்ட தொகையாக ரூ. 1.23 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியதாய் யோஜனா திட்டம் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்விக்கடன் திட்டம், உள்நாட்டில் படிக்கும் மாணவா்களுக்கு ரூ.20 லட்சம், வெளிநாட்டில் படிக்கும் மாணவா்களுக்கு ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்டங்கள் குறித்த தகவல் பெற மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

மண் குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

நாகப்பட்டினம்: நாகை அருகே விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கவுள்ள மண் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வங்கிக் கடன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாக உருவாக்கும் முகாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் முன்மாதிரியாக உருவாக்க 2 நாள் முகாம் அண்மையில் நடைபெற்றது. தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் ப... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் வட்டத்த... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் பொது விருந்து

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி பொது விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது. சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் கலந்து கொண்டு ப... மேலும் பார்க்க

கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளத்தில் மணல் எடுக்க தடை விதிக்க வலியுறுத்தல்

பூம்புகாா் அருகே உள்ள மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் கிராமங்களில் மணல் எடுக்க தடை செய்ய வேண்டுமென இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலப்பெரும்பள்ளம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் ஊராட்சிகள... மேலும் பார்க்க