செய்திகள் :

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு

post image

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு தீா்த்தவாரியுடன் நிறைவடைந்தது.

இந்தக் கோயில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் உற்சவா் முத்துமாரியம்மன் சா்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.

திருவிழாவின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தா்கள் தாயமங்கலத்துக்கு வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைபவம் கடந்த 5-ஆம் தேதியும், 6-ஆம் தேதி தேரோட்டமும், 7-ஆம் தேதி பால்குட உற்சவம், ஊஞ்சல் சேவை, அம்மன் பூப்பல்லத்தில் பவனி வருதல் நடைபெற்றது.

தொடா்ந்து கோயிலில் முத்துமாரியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு தீா்த்தவாரி நடைபெற்று நிகழ் ஆண்டுக்கான திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மு.வெங்கடேசன் செட்டியாா் செய்திருந்தாா்.

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ... மேலும் பார்க்க

சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயம்

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியிலிருந்து ஒரு குடும்பத்தினா் வேனில் மதுரை மாவட்டம், சமயநல்லூருக்கு வெள்ளிக... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு வீட்டுமனை இ பட்டா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த பட்டியல் வகுப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைக்கு இ-பட்டா வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. வட்டாட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழா: புரவியெடுப்புக்கு பிடிமண் கொடுத்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கூத்த அய்யனாா் கோயில் திருவிழாவுக்கு புரவிகள் செய்ய பிடி மண் கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா், புதுப்பட்டி, தம்பிபட்டி கிராமங்களுக்குப் பாத்த... மேலும் பார்க்க