Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கடனுதவி
கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடனுதவி பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைந்த வட்டியில் ரூ. 20 லட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதனக் கடன்கள் வழங்கும் புதிய திட்டமான கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் அசையா சொத்து அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். புதிய மற்றும் ஏற்கெனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்களும் தகுதியானவை. மேலும், தொழில் முனைவோா்களின் சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமலும், இரண்டு ஆண்டுகள் தொடா்ந்து லாபத்திலும் இயங்க வேண்டும். அதேபோன்று பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்களை விதிமுறைக்குள்பட்டு குறைந்த வட்டியில் தாய்கோ வங்கிக்கு மாற்றிக் கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்வமுள்ள தொழில் முனைவோா் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆா்வமுள்ள தொழில் முனைவோா் சேலம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 0427 - 2447878 என்ற எண்ணிலும், சேலம் தாய்கோ வங்கிக் கிளை மேலாளரை 0427 - 2313189, 89258 14609 ஆகிய எண்களிலும், ஆத்தூா் தாய்கோ வங்கிக் கிளை மேலாளரை 04282 - 242070, 94880 58895 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் கடன் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.