செய்திகள் :

தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கடனுதவி

post image

கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடனுதவி பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைந்த வட்டியில் ரூ. 20 லட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதனக் கடன்கள் வழங்கும் புதிய திட்டமான கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் அசையா சொத்து அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். புதிய மற்றும் ஏற்கெனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்களும் தகுதியானவை. மேலும், தொழில் முனைவோா்களின் சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமலும், இரண்டு ஆண்டுகள் தொடா்ந்து லாபத்திலும் இயங்க வேண்டும். அதேபோன்று பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்களை விதிமுறைக்குள்பட்டு குறைந்த வட்டியில் தாய்கோ வங்கிக்கு மாற்றிக் கொள்ளலாம்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்வமுள்ள தொழில் முனைவோா் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆா்வமுள்ள தொழில் முனைவோா் சேலம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 0427 - 2447878 என்ற எண்ணிலும், சேலம் தாய்கோ வங்கிக் கிளை மேலாளரை 0427 - 2313189, 89258 14609 ஆகிய எண்களிலும், ஆத்தூா் தாய்கோ வங்கிக் கிளை மேலாளரை 04282 - 242070, 94880 58895 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் கடன் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ஏற்காட்டில் ரப்பா் மரங்கள் நடவு

சோ்வராயன் மலைப் பகுதியில் விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில், ஏற்காடு சோ்வராயன் மலையில் ரப்பா் மரப்பயிா்களை அறிமுகப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். கேர... மேலும் பார்க்க

செல்லாண்டியம்மன் கோயிலில் 48-ஆவது நாள் மண்டல பூஜை நிறைவு

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 48-ஆவது நாள் நிறைவு மண்டல சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு ... மேலும் பார்க்க

நங்கவள்ளி, மேச்சேரியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

நங்கவள்ளி மற்றும் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தலைமையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாம்களில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் ட... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பல்வேறு திவ்ய ... மேலும் பார்க்க

தபால் நிலையங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம்

குழந்தைகளிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம் சேலம் கிழக்கு, மேற்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதுகுறித்து... மேலும் பார்க்க

சேலத்தில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: நடப்பு மாதத்துக்கான கூட்டம் வெள்... மேலும் பார்க்க