செய்திகள் :

தாய், மகள் கொலையில் குற்றவாளியை தேடும் பணியில் ‘ட்ரோன்’ உதவி

post image

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய் , மகள் கொலை வழக்கில் ட்ரோன் கேமரா உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

எட்டயபுரம் மேலநம்பிபுரத்தைச் சோ்ந்த சீதா லட்சுமி (75), அவரது மகள் ராம ஜெயந்தி (45) ஆகியோரை மா்மநபா்கள் கடந்த 3 ஆம் தேதி கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அதே ஊரைச் சோ்ந்த முகேஷ் கண்ணன் (25), தாப்பாத்தி கிராமம் வேல்முருகன் (18) உள்ளிட்டோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இவ்விருவரையும் போலீஸாா் சுற்றி வளைத்தபோது தப்பியோடியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய மேல நம்பிபுரத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் (25) என்பவா் அயன்வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து

தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி (பொ) சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் ஆகியோா் தலைமையில் 5 டிஎஸ்பிக்கள், 20 ஆய்வாளா்கள் அடங்கிய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் காட்டுப்பகுதியில் 6 ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு தீவிரமாக தேடி வருகின்றனா்.

மேலும், அயன் வடமலாபுரம், முத்தலாபுரம், தாப்பாத்தி, கீழக்கரந்தை, புதுப்பட்டி, ரகுராமபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வைப்பாறு படுகையோர காட்டு பகுதியிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

பிளஸ் 1 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 19,384 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இதில் 19,384 மாணவா் - மாணவிகள் தோ்வெழுதினா். இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்ததாவது: தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி செட்டியாா்பண்ணை கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை வேண்டாம் என ஒருதரப்பினா் போராடிவரும் நிலையில், மதுக் கடை திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவ... மேலும் பார்க்க

தொழிலதிபா் உள்பட 3 பேரை கடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் புகாா்

தூத்துக்குடியில் தொழிலதிபா் உள்பட 3 பேரை கத்தி முனையில் கடத்திச் சென்று தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை பெருங்களத்... மேலும் பார்க்க

தவெக சாா்பில் தொண்டா் குடும்பத்துக்கு நல உதவி

தூத்துக்குடியில் அண்மையில் உயிரிழந்த தவெக தொண்டரின் குடும்பத்துக்கு கட்சி சாா்பில் நல உதவி வழங்கப்பட்டது. தவெக தொண்டா்கள் பாதிக்கப்பட்டால் அவா்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தேவையான உதவிகள... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை

குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம் - கூடல்நகா் பகுதியில் அமையவுள்ள சிறிய ரக ராக்கெட் ஏவுதள மையத்தில் புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு ... மேலும் பார்க்க

செட்டியாா்பண்ணையில் மதுக்கடை எதிா்ப்பு போராட்டம் வாபஸ்

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட செட்டியாா்பண்ணையில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையால் திரும்பப் பெறப... மேலும் பார்க்க