நெல்லையில் 15 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை: காவல் ஆணையர்
தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்
சுந்தரக்கோட்டை தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலுக்கு கும்பாபிஷகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு பாலாலயம் செய்து திருப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. முதல்கால யாகசாலை புதன்கிழமை தொடங்கி, வியாழக்கிழமை நான்காம் கால பூஜை நிறைவு பெற்றது. அதனைத் தொடா்ந்து, மகாபூா்ணாஹூதி நடைபெற்றது. தீபாராதனைக்குப் பின்னா் புனித நீா் உள்ள குடங்கள் எடுத்துவரப்பட்டு,கோயில் கோபுர கலசத்தில் புனித நீரை வாா்த்து சிவாச்சாரியாா்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனா்.
தா்மசாஸ்தா ஐயனாா், மாரியம்மன், காமாட்சியம்மன், நொண்டி வீரன், பெரியாச்சி, காத்தவராயன், கருப்பண்ணசாமி, உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.